[FILE IMAGE]
தமிழ்நாடு அமைச்சர்கள் கே.என்.நேரு, ரகுபதி, ஐ.பெரியசாமி மற்றும் முன்னாள் அமைச்சர் கோ.சி.மணி ஆகியோர் மீது தொடரப்பட்ட சொத்து குவிப்பு வழக்குகளை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த 1996-2001 ஆண்டுகளில் திமுக ஆட்சி காலத்தில் இந்த 4 அமைச்சர்கள் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக புகார் தெரிவித்து, அடுத்து வந்த அதிமுக அரசு வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளை சொத்து குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர்கள் அனைவரையும் விடுதலை செய்து உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து கடந்த 2015ம் ஆண்டு உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் அதிமுக அரசு முறையீடு செய்திருந்தது.
தமிழகத்தில் நடப்பது திராவிட மாடல் ஆட்சி அல்ல, தந்திர மாடல் ஆட்சி.. எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!
இந்த நிலையில், அமைச்சர்கள் கே.என்.நேரு, ரகுபதி, ஐ.பெரியசாமி, முன்னாள் அமைச்சர் கோ.சி.மணி ஆகியோர் மீது தொடரப்பட்ட சொத்துகுவிப்பு வழக்குகளை ரத்து செய்து, அதிமுக அரசு செய்த முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம். காலதாமதமாக வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக கூறி சொத்துகுவிப்பு வழக்குகளை உச்சநீதிமன்ற நீதிபதிகள் கவாய், நரசிம்மா ஆகியோர் அடங்கிய அமர்வு தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
மேலும், 2002-2004 வரை மதுரை மேயராக இருந்த குழந்தை வேலு மீதான வழக்குகளையும் ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதுபோன்று, அமைச்சர்கள் துரைமுருகன், எம்ஆர்கே பன்னீர்செல்வம் உள்ளிட்டோருக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்குகளும் ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், மொத்தம் 7 திமுக அமைச்சர்களின் சொத்துகுவிப்பு வழக்குகளை உச்சநீதிமன்றம் ரத்து செய்து, அதிமுக மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
துபாய் : இந்த வருட சாம்பியன்ஸ் டிராபி தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்தி வருகிறது. ஆனால், துரதிஷ்டவசமாக பாகிஸ்தான்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதற்கு மிக முக்கிய காரணங்களில் ஒன்று எலான் மஸ்கின் தீவிர…
சென்னை : தமிழகத்தில் சமீபகாலமாக பல்வேறு இடங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சி…
சென்னை : முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. 2025-26 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட வேண்டிய…
நாகர்கர்னூல் : தெலுங்கானாவின் நாகர்கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் (SLBC) சுரங்கப்பாதையில் கடந்த சனிக்கிழமை காலை…
வங்கதேசம் : வங்காள விரிகுடாவில் இன்று அதிகாலை 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம்…