எச்சரிக்கை: இந்த 11 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு வெயில் சுட்டெரிக்கும்.!

Default Image

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு வெயில் சுட்டெரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல்.

தமிழகத்தில் ஏற்கனவே வெயில் கொளுத்தி வரும் நிலையில், ஆம்பன் புயல் கரையை கடக்கும் பொது தமிழகத்தில் உள்ள ஈரக்காற்றை முழுவதும் இழுத்து சென்றது. இதனால் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை  தாண்டி வெயில் கொளுத்தி வருகிறது. நேற்று அதிகபட்ச வெப்பநிலையாக, திருத்தணியில் 110.8 டிகிரி ஃபாரன்ஹீட் பதிவு. மேலும், தமிழகத்தில் இன்று 13 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவானது.

இந்நிலையில், தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு வெயில் சுட்டெரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெயில் 104 டிகிரியை தாண்டும் என்பதால் பகல் 11 மணி முதல் மதியம் 3 மணி வரை மக்கள் வெளியே செல்ல வேண்டாம் என்று தெரிவித்துள்ளது. திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், மதுரை, திருச்சி, கரூரில் 2 நாட்களுக்கு வெயில் அதிகரிக்கும். தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நெல்லையிலும் வெயில் 104 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டும் என்று கூறியுள்ளது.

இந்த 2 நாட்களுக்கு பிறகு வெயில் படிப்படியாக குறைய வாய்ப்பு உள்ளது என்றும் பலத்த காற்று வீசும் என்பதால் தென்மேற்கு அரபிக்கடல் பகுதிக்கு 5 நாட்களுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெப்பச்சலனத்தால் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தென் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதிகபட்சமாக நீலகிரியில் 7, சித்தார், எடப்பாடியில் தலா 5 செ.மீ மழை பதிவானது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 30042025
ramadoss
Punjab won the toss and elected to field
Rajinikanth