அதிமுகவினர் போராட்டம் நடத்தியும் கோவை தெற்கு தொகுதியை பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளதால் அதிமுகவினர் அதிருப்தியில் உள்ளனர்.
ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற சட்டமன்ற தேர்தலை தொடர்ந்து, இன்று அதிமுக ஒரு பக்கம் 2-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. மறுபுறம் பாஜக போட்டியிடும் தொகுதிகளின் பட்டியலை அதிமுக வெளியிட்டுள்ளது. அதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவுக்கு 20 சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கோவை தெற்கு தொகுதி அதிமுகவிற்கு ஒதுக்கப்படுமா..? அல்லது பாஜக ஒதுக்கப்படுமா..? என எதிர்க்கப்பட நிலையில், பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட 20 சட்டமன்ற தொகுதிகளில் கோவை தெற்கு தொகுதி இடம்பெற்றுள்ளது. பொதுவாக தொகுதி பங்கீட்டில் வரும் பிரச்சனையை விட எந்தந்த தொகுதியில் யார் போட்டிடவுள்ளனர் என்பதில் தான் கூட்டணிகளுக்குள் பிரச்சனை ஏற்படும்.
அந்த வகையில், தொகுதி பட்டியல் வெளியிடுவதற்கு முன்னதாகவே கோவை தெற்கு தொகுதியில் பாஜகவினர் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியானது. இந்த செய்தியை அறிந்த அதிமுகவினர் இன்று காலை கோவை தெற்கு தொகுதியை பாஜகவிற்கு ஒதுக்ககூடாது எனவும் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனனுக்கு ஒதுக்க கோரி கோவை அதிமுக அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேண்டும் வேண்டும் கோவை தெற்கு தொகுதி வேண்டும். பாஜகவுக்கு விட்டுத்தர முடியாது என முழக்கங்களை எழுப்பினர். அப்போது கோவை தெற்கு தொகுதியை பாஜவிற்கு கொடுத்தால், தேர்தலுக்கு வேலை செய்ய மாட்டோம். கட்சியை விட்டு விலகுவோம் என அதிமுகவினர் தெரிவித்தனர். இந்நிலையில், இன்று காலை அதிமுகவினர் போராட்டம் நடத்தியும் கோவை தெற்கு தொகுதியை பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளதால் அதிமுகவினர் அதிருப்தியில் உள்ளனர்.
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தில் இதுவரை வெளியான தகவலின்…
ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்தத் தாக்குதலில், திருமணமாகி வெறும் மூன்று…
ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் நேற்று பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பராபரையும்…
சென்னை : தென்தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக நேற்று சில மாட்டவங்களில் மழை…
ஸ்ரீநகர் : நேற்று (ஏப்ரல் 22) உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில்…
லக்னோ : கடந்த ஆண்டு லக்னோ அணிக்காக கேப்டனாக விளையாடிய கே.எல்.ராகுல் சில போட்டிகளில் அணி தோல்வி அடைந்த காரணத்தால் உரிமையாளரிடம்…