போராட்டம் வீணானது..கோவை தெற்கு பாஜகவுக்கு ஒதுக்கீடு.,அதிமுகவினர் அதிருப்தி..!

Default Image

அதிமுகவினர் போராட்டம் நடத்தியும் கோவை தெற்கு தொகுதியை பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளதால் அதிமுகவினர் அதிருப்தியில் உள்ளனர். 

ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற சட்டமன்ற தேர்தலை தொடர்ந்து, இன்று அதிமுக ஒரு பக்கம் 2-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. மறுபுறம் பாஜக போட்டியிடும் தொகுதிகளின் பட்டியலை அதிமுக வெளியிட்டுள்ளது. அதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவுக்கு 20 சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கோவை தெற்கு தொகுதி அதிமுகவிற்கு ஒதுக்கப்படுமா..? அல்லது பாஜக ஒதுக்கப்படுமா..? என எதிர்க்கப்பட நிலையில், பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட 20 சட்டமன்ற தொகுதிகளில் கோவை தெற்கு தொகுதி இடம்பெற்றுள்ளது. பொதுவாக தொகுதி பங்கீட்டில் வரும் பிரச்சனையை விட எந்தந்த தொகுதியில் யார்  போட்டிடவுள்ளனர் என்பதில் தான் கூட்டணிகளுக்குள் பிரச்சனை ஏற்படும்.

அந்த வகையில், தொகுதி பட்டியல் வெளியிடுவதற்கு முன்னதாகவே கோவை தெற்கு தொகுதியில் பாஜகவினர் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியானது. இந்த செய்தியை அறிந்த அதிமுகவினர் இன்று காலை கோவை தெற்கு தொகுதியை பாஜகவிற்கு ஒதுக்ககூடாது எனவும் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனனுக்கு ஒதுக்க கோரி கோவை அதிமுக அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேண்டும் வேண்டும் கோவை தெற்கு தொகுதி வேண்டும். பாஜகவுக்கு விட்டுத்தர முடியாது என முழக்கங்களை எழுப்பினர். அப்போது கோவை தெற்கு தொகுதியை பாஜவிற்கு கொடுத்தால், தேர்தலுக்கு வேலை செய்ய மாட்டோம். கட்சியை விட்டு விலகுவோம் என அதிமுகவினர் தெரிவித்தனர். இந்நிலையில், இன்று காலை அதிமுகவினர் போராட்டம் நடத்தியும் கோவை தெற்கு தொகுதியை பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளதால் அதிமுகவினர் அதிருப்தியில் உள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்