ஸ்டெர்லைட் ஆய்வு குழுவுக்கு ஆலையை திறக்கலாம் என கூறுவதற்கு அதிகாரம் இல்லை…!அமைச்சர் கடம்பூர் ராஜூ

Default Image

ஸ்டெர்லைட் ஆய்வு குழுவுக்கு ஆலையை திறக்கலாம் என கூறுவதற்கு அதிகாரம் இல்லை என்று  அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கோவில்பட்டியில்  அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறுகையில்,  தமிழ் ராக்கர்ஸை தமிழக அரசால் மட்டும் ஒழிக்க முடியாது. தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் இணைந்து வந்தால் மட்டுமே முடியும். திருட்டு விசிடியை ஒழிக்க தனி சட்டம் உள்ளது.அதனை நடைமுறைப்படுத்த அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். ஸ்டெர்லைட் ஆய்வு குழுவுக்கு ஆலையை திறக்கலாம் என கூறுவதற்கு அதிகாரம் இல்லை. சிறப்பு அதிகாரியாக பொன்.மாணிக்கவேல் நியமிக்கப்பட்டதை அரசு விமர்சனம் செய்யாது என்றும் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்