ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் குறித்து கடலூரில் மாநில செயற்குழு கூட்டமானது பாஜக மேவிட பொறுப்பாளர் சி.டி.ரவி தலைமையில் இன்று நடைபெற உள்ளது.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வருகிற பிப்ரவரி 27ஆம் தேதி நடக்க உள்ளது. இதனால் பிரதான கட்சிகள் முழுவீச்சில் தங்கள் தேர்தல் பணிகளை ஆரம்பித்து உள்ளன.
கடந்த முறை 2021 தேர்தலில் திமுக – அதிமுக என இரு கட்சிகளும் தங்களது கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் பிரதிநிதிகளை களம் இறக்கியது. அதேபோல இந்த முறையும் நடைபெறுமா அல்லது திமுக – அதிமுக நேரடியாக போட்டியிடுமா என்ற சூழல் நிலவி வருகிறது. அதே போல மற்ற கூட்டணி கட்சிகளின் நிலைப்பாடும் என்ன என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசி பொருளாக இருக்கிறது.
இந்த நிலையில் தான் அதிமுக கூட்டணியிலுள்ள பாஜக தனது நிலைப்பாடு குறித்து இன்று கடலூரில் ஆலோசனை நடத்துகிறது. கடலூரில் மாநில செயற்குழு கூட்டமானது பாஜக மேவிட பொறுப்பாளர் சி.டி.ரவி தலைமையில் இன்று நடைபெற உள்ளது.
இந்த செயற்குழு கூட்டத்தில் முக்கிய நிர்வாகிகள் மட்டும் கலந்து கொள்ள உள்ளனர். இதில் இடைத்தேர்தலில் பாஜகவின் நிலைப்பாடு என்ன? பாஜக தனித்து களம் காண உள்ளதா? அல்லது அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிக்க உள்ளதா? என்பது குறித்து தீர்மானிக்கப்பட உள்ளது. ஏற்கனவே தமிழ் மாநில காங்கிரஸ் நாங்கள் போட்டியிடவில்லை அதிமுக தான் போட்டியிடுகிறது என்று அதன் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…