எங்கு தொடங்கியதோ.. அங்கேயே முடிந்த ஆன்மீக பயணம்.! பங்காரு அடிகளாரின் இறுதி நிகழ்வுகள்…

Published by
மணிகண்டன்

ஆன்மீக குருவாகவும், பக்கதர்களால் அம்மா என அன்போடு அழைக்கப்பட்டவருமான பங்காரு அடிகளார் நேற்று உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். ஆன்மீக உலகில் மிகப்பெரும் பங்காற்றிய அடிகளார் மறைவு பலருக்கும் மீள இழப்பாக மாறியுள்ளது. அவரது உடல் மேல்மருவத்தூர் ஆன்மீக மன்றத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருந்தது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் முதல் தமிழக அமைச்சர்கள் பொன்முடி, தா.மோ.அன்பரசன், திமுக எம்பி ஜெகத்ரட்சகன், ஆளுநர் ஆர்.என்.ரவி, டாக்டர் அன்புமணி ராமதாஸ், ஓ.பன்னீர்செல்வம் என பலர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.

ஆண்களுக்கு சபரிமலை… பெண்களுக்கு மேல்மருவத்தூர்… பங்காரு அடிகளாரின் ஆன்மீக நகர்வுகள்.!

தற்போது அவரது உடலுக்கு இறுதி சடங்குகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதல்வர் அறிவித்தபடி அரசு முறைப்படி இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. காவல்துறை சார்பில் 21 குண்டுகள் முழங்க அரசு முறை மரியாதை அளிக்கப்பட்டது.

தமிழக அரசு சார்பில் அமைச்சர் பொன்முடி இறுதி சடங்கில் பங்கேற்றார். உடன் ஆளுநர் ஆர். என்.ரவி பங்கேற்றார். பங்காரு அடிகளாரின் உடல் அவர் விருப்பப்படி,  அவர் எங்கு ஆன்மீக பயணத்தை தொடங்கினாரோ அதே இடத்தில் அதாவது கோவில் கருவறை மற்றும் சுற்று மண்டபம் பகுதிக்கு இடையே உள்ள இடத்தில் பங்காரு அடிகளார் உடல் நல்லடக்கம் செய்யபட உள்ளது.

பக்தர்கள் மத்தியில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அம்மனின் மறுஉருவமாகவும், அம்மாவாகவும் வாழ்ந்து வந்த பங்காரு அடிகளார் உண்மையாகவே தெய்வமாகியுள்ளர். பக்தர்களின் அழுகுரலுக்கு நடுவே அடிகளாரின் இறுதி சடங்குகள் நடைபெறுகின்றன.

Published by
மணிகண்டன்

Recent Posts

வெயிலுக்கு இதமாய் வரும் மழை.! இந்த மாவட்டங்களில் 3 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு!

சென்னை : தமிழ்நாட்டில் வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், அடுத்த சில நாட்களில் கனமழை சில மாவட்டங்களில் பெய்ய…

1 hour ago

டாஸ்மாக் விவகாரம்: தமிழ்நாடு அரசின் வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்க.! அமலாக்கத்துறை பதில் மனு…

சென்னை : தமிழகத்தில் டாஸ்மாக் தலைமை அலுவலகம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் மார்ச் 6ம் தேதி முதல் 8ம்…

1 hour ago

“திருச்சியை தலைநகராக மாத்துங்க”! நயினார் கோரிக்கையை அன்போடு பரிசீலிப்போம்- முதல்வர் ஸ்டாலின்!

சென்னை : இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி 6, 2025 அன்று ஆளுநரின் உரையுடன் தொடங்கிய நிலையில்,…

2 hours ago

முடிஞ்சா மோதி பாருங்க!! ரசிகர்களால் ரோஹித்துக்கு புதிய சாதனை.! என்ன தெரியுமா?

மும்பை : நேற்றைய ஆட்டத்தில் கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் எளிதாக வென்று, நடப்பு ஐபிஎல் சீசனில் முதல் வெற்றியை மும்பை…

3 hours ago

மலேசியாவில் எரிவாயு குழாய் வெடித்து விபத்து! 33 பேர் காயம்..மீட்பு பணி தீவிரம்!

மலேசியா :  தலைநகர் கோலாலம்பூருக்கு அருகே உள்ள புறநகர்ப் பகுதியான புத்ரா ஹைட்ஸில் (Putra Heights), செலங்கோர் மாநிலத்தில், பெட்ரோனாஸ்…

3 hours ago

அச்சுறுத்தும் தெருநாய்க்கடி: “ஆபத்தான நாய்களை கருணைக் கொலை செய்யலாம்” – அன்புமணி

சென்னை : தமிழ்நாட்டில் தெருநாய்க்கடி சம்பவங்கள் என்பது சமீப ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்து வருகின்றன, உதாரணமாக சொல்லவேண்டும் என்றால், இந்த…

3 hours ago