மதுரை மாவட்டம் வண்டியூர் அருகே சுந்தர் நகர் 2-வது தெருவை சேர்ந்த சிக்கந்தர் மைதீன் என்பவரது மகன் அசாருதீன் தனது தாய் மற்றும் அண்ணன் யாசர் அரபாத் உடன் வாழ்ந்து வந்த நிலையில், அசாருதின் போதைக்கு அடிமையாகி தாய், தந்தையிடம் போதைப் பொருள் வாங்க பணம் கேட்டு அடிக்கடி துன்புறுத்தியதோடு, பெற்றோரை தாக்கி தகாத வார்த்தைகளால் திட்டி வந்துள்ளார். மகனின் இதுபோன்ற செயலால் மனம் வெறுத்துப்போன தாய் ஹபீபா பேகம் மற்றும் மூத்த மகனான யாசர் அராபத் இருவரும் சேர்ந்து இன்று அதிகாலை தூங்கி கொண்டிருந்த அசாருதீனின் கை, கால்களை துணியால் கட்டி கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளனர்.
இது குறித்து தகவலறிந்து வந்த அண்ணாநகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தாய் மற்றும் மகனை கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பின்னர் உயிரிழந்த அசாருதீனின் உடலை அரசு இராஜாஜி மருத்துவமனைக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்தனர். மேலும், போதை பழக்கத்திற்கு அடிமையாகிய இளைஞரின் செயலால் தனது உயிர் போனதோடு, தாயையும், சகோதரனையும் சிறைக்கு அனுப்பிய அவலம் அப்பகுதியில் ஏற்பட்டுள்ளது.
டெல்லி : எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…
வதோதரா : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி0 போட்டிகள், 3 ஒரு…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…
சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…