மதுரை மாவட்டம் வண்டியூர் அருகே சுந்தர் நகர் 2-வது தெருவை சேர்ந்த சிக்கந்தர் மைதீன் என்பவரது மகன் அசாருதீன் தனது தாய் மற்றும் அண்ணன் யாசர் அரபாத் உடன் வாழ்ந்து வந்த நிலையில், அசாருதின் போதைக்கு அடிமையாகி தாய், தந்தையிடம் போதைப் பொருள் வாங்க பணம் கேட்டு அடிக்கடி துன்புறுத்தியதோடு, பெற்றோரை தாக்கி தகாத வார்த்தைகளால் திட்டி வந்துள்ளார். மகனின் இதுபோன்ற செயலால் மனம் வெறுத்துப்போன தாய் ஹபீபா பேகம் மற்றும் மூத்த மகனான யாசர் அராபத் இருவரும் சேர்ந்து இன்று அதிகாலை தூங்கி கொண்டிருந்த அசாருதீனின் கை, கால்களை துணியால் கட்டி கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளனர்.
இது குறித்து தகவலறிந்து வந்த அண்ணாநகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தாய் மற்றும் மகனை கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பின்னர் உயிரிழந்த அசாருதீனின் உடலை அரசு இராஜாஜி மருத்துவமனைக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்தனர். மேலும், போதை பழக்கத்திற்கு அடிமையாகிய இளைஞரின் செயலால் தனது உயிர் போனதோடு, தாயையும், சகோதரனையும் சிறைக்கு அனுப்பிய அவலம் அப்பகுதியில் ஏற்பட்டுள்ளது.
சென்னை :வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து கடந்த செப்-5ம் தேதி மிகுந்த எதிர்பார்ப்புடன் திரையருங்குகளில் வெளியான GOAT திரைப்படம்…
ஹைதராபாத் : முன்னணி நடன இயக்குநர் ஜானி மீது 21 வயது இளம் பெண் ஐதராபாத் போலீசில் பாலியல் பலாத்கார புகார்…
சென்னை : மணிமேகலை மற்றும் பிரியங்கா ஆகியோருக்கு இடையே நடந்த ஆங்கரிங் பிரச்சனை பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில்,…
சென்னை : தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் என்கிற (ஃபெப்சி) அமைப்பின் சார்பில், அதன் தலைவர் ஆர்.கே.செல்வமணி நேற்று நிருபர்களுக்கு…
சென்னை- வீட்டில் இருக்கும் கொஞ்ச பொருட்களை வைத்து சட்டென ஒரு ஸ்நாக்ஸ் ரெடி பண்ணனுமா ?அப்போ இந்த பஞ்சு போன்ற…
சென்னை : ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளராக விலகிய பிறகு தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமைப்…