சொத்து தகராறில் தந்தையை வெட்டி கொன்ற மகன்.!

Default Image

மதுரையில் சொத்துக்காக மகனே தந்தையை வெட்டி கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையில் உள்ள தெற்குவாசல் பகுதியை சேர்ந்த மணி என்பவர் இரண்டு திருமணம் செய்து கொண்டவர். தற்போது இவர் இரண்டாவது மனைவியுடன் வசித்து வர முதல் மனைவியை விவாகரத்து செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மணி தனது இரண்டு மனைவிகளிலும் உள்ள பிள்ளைகளுக்கு சொத்து பிரித்து கொடுப்பதில்  தகராறு ஏற்பட்டுள்ளது.

அதனால் கோவமடைந்த மணியின் முதல் மனைவியின் மகனான கார்த்திக்கேயன், தனது தந்தையை நண்பர்களுடன் இணைந்து சாலையில் ஓட ஓட விரட்டி கொலை செய்துள்ளார். அதனையடுத்து கார்த்திகேயன் அவ்விடத்திலிருந்து தப்பி ஒட, சம்பவம் அறிந்து விரைந்து வந்த தெற்குவாசல் காவல்துறையினர் தலைமறைவாகி இருந்த கார்த்திக்கேயன் மற்றும் அவரது நண்பர்கள் 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். சொந்த தந்தை என்று கூட பாராமல் மகனை அவரது சொத்துக்காக கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்