எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட இஸ்ரோ விஞ்ஞானியின் மகன்…! நடந்தது என்ன…?

Published by
லீனா

சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள ஹாக்கி விளையாட்டு மைதானத்தில் எரிந்த நிலையில் மீட்கப்பட்ட இஸ்ரோ விஞ்ஞானி மகனின் சடலம்.

சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள ஹாக்கி விளையாட்டு மைதானத்தில் எரிந்த நிலையில் ஒரு சடலம் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற அதிகாரிகள் சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.

அந்த விசாரணையில், இறந்து கிடந்தவர் கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த உன்னிகிருஷ்ணன் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர் இஸ்ரோவில் பணிபுரியும் ரகு என்பவரின் மகன் ஆவார். இவர் வேளச்சேரியில் தங்கி, ஐஐடி மாணவர்களுக்கு ப்ராஜெக்ட் வேலைகளை செய்து கொடுத்ததும் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, உன்னிகிருஷ்ணனின் அறைக்கு சென்று அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த அறையில், தற்கொலைக்கான கடிதம் ஒன்றினை அதிகாரிகள் கைப்பற்றினர். அந்த கடிதத்தில், நான் என்ன செய்கிறேன் என்பதே தெரியவில்லை. நான் மிகுந்த மன அழுத்தத்தில் இருக்கிறேன். என் மரணத்திற்கு யாரும் காரணமில்லை என ஆங்கிலத்தில் எழுதியிருந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், அவர் சிறிய தண்ணீர் கேனில் பெட்ரோல் எடுத்து சென்று தீயிட்டு கொளுத்தியுள்ளதாகவும், அதற்கான தடயங்கள் கிடைத்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, அவரது நண்பர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Published by
லீனா

Recent Posts

தீவிரவாத தாக்குதல்…, நடிகர் அஜித் கேட்டு கொண்டது இதைத்தான்!

தீவிரவாத தாக்குதல்…, நடிகர் அஜித் கேட்டு கொண்டது இதைத்தான்!

டெல்லி : நடிகர் அஜித்குமாருக்கு பத்ம பூஷன் விருதை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார். நேற்றைய தினம் டெல்லியில்…

14 minutes ago

“மக்களுக்காக பணியாற்ற மீண்டும் ஒரு வாய்ப்பு” -அமைச்சர் மனோ தங்கராஜ் நெகிழ்ச்சி!

சென்னை : நேற்று முன் தினம் தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மனோ தங்கராஜ் மீண்டும் அமைச்சர் பொறுப்பு…

33 minutes ago

குஜராத்தை கதறவிட்ட 14 வயது சிறுவன்…ராஜஸ்தான் த்ரில் வெற்றி!

ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற  ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…

9 hours ago

கடுகு சிறுசு தான் காரம் பெருசு! சம்பவம் செய்த வைபவ் சூர்யவன்ஷி!

ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள…

9 hours ago

இந்தியா தாக்குதல் நடத்தலாம்…எங்கள் படைகளை வலுப்படுத்தியுள்ளோம்! – பாகிஸ்தான்!

பஹல்காம் : கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர்…

9 hours ago

பறக்கவிட்ட பட்லர்..சுழற்றி அடித்த கில்! ராஜஸ்தானுக்கு குஜராத் வைத்த டார்கெட்?

ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…

11 hours ago