இருசக்கர வாகன சீட்டிற்குள் நுழைந்த பாம்பு! போராடி மீட்ட தீயணைப்பு துறையினர்!

Default Image

இருசக்கர வாகன சீட்டிற்குள் நுழைந்த பாம்பு.

தென்காசி மாவட்டத்தின் நகர் பகுதியில் உள்ள தனியார் மொபைல் கடை ஒன்றின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை, அதன் உரிமையாளர் எடுக்கச் சென்றபோது சீட்டிற்கு கீழே  வித்தியாசமாக ஏதோ ஒன்று இருப்பதை உணர்ந்த அவர், பக்கத்தில் இருந்தவர்களை அழைத்துள்ளார். அவர்கள் சீட்டை கம்பால் தூக்கி பார்த்த போது, சீட்டிற்கு கீழ் பாம்பு ஒன்று இருப்பதை பார்த்துள்ளனர்.

இதனையடுத்து, இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், தீயணைப்பு துறை நிலைய அலுவலர் ரமேஷ் தலைமையில் அங்கு சென்ற வீரர்கள், இருசக்கர வாகனத்தின் சீட்டை பிரித்து பார்த்தனர். ஆனால் அதில் பாம்பு இல்லை. பின்னர் டார்ச் லைட் கொண்டு தேடும்போது, வாகனத்தின் ஏர்பில்டர் என்ற ஓட்டை வழியாக பாம்பு வாகனத்திற்குள் நுழைந்தது.

இதனையடுத்து தீயணைப்பு துறை ஊழியர்கள் பலமுறை முயற்சி செய்த பின்னும் பாம்பு வெளியே வராத நிலையில், பைக்கை ஸ்டார்ட் செய்த உடனே பாம்பு தலையை வெளியே காட்டியது. அதன்பின் பாம்பை தீயணைப்பு துறையினர் பாம்பை மீட்டுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்