ஒற்றை தலைமை என்பது ஒரு பிரச்சனையே இல்லை-அமைச்சர் ஜெயக்குமார்

Default Image

அதிமுகவில் இரட்டை தலைமை கூடாது ,ஒற்றை தலைமை வேண்டும் என்று கூறிய அதிமுக எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பாவின் கருத்து பெறும் பரபரப்பை அக்கட்சிக்குள் ஏற்படுத்தியது.
மேலும் இந்த விவகாரம் தொடர்பாக நேற்று ( ஜூன் 12-ஆம் தேதி) அதிமுக ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்று அதிமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டது.
அதன்படி நேற்று சென்னை ராயப்பேட்டை கட்சி தலைமையகத்தில் அதிமுக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.ஒன்றரை மணி நேரத்திற்கு பின்பு அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்  முடிவடைந்தது.
இதன் பின் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில்,ஒற்றை தலைமை என்பது ஒரு பிரச்சனையே இல்லை, அதுகுறித்து கூட்டத்தில் எதுவும் பேசவில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்