காவல் நிலையத்திலேயே மாப்பிளையை அடித்து மணப்பெண்ணை கடத்தி சென்ற அதிர்ச்சி சம்பவம்.!

Published by
பாலா கலியமூர்த்தி
  • கன்னியாகுமரியில் காதலர்கள் இருவரும் வீட்டார்களை எதிர்த்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.
  • பின்னர் காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு வந்த காதலனை சரமாரியாக தாக்கியதோடு காதலியை காரில் ஏற்றிக் கொண்டு சென்றதாக தெரிகிறது.

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே துவரங்காடு பகுதியை சேர்ந்தவர் தாசம்மாள். இவருக்கு 2 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். இவரது இரண்டாவது மகன் 28 வயதான பியூட்டலின். இவரும் வெள்ளிச்சந்தைப் பகுதியை சேர்ந்த சரண்யா என்ற பெண்ணும் மூன்று வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். காதலர்கள் இருவரும் வேறு வேறு ஜாதியை சேர்ந்தவர்கள் என்பதால் பெண் வீட்டார் இருவரின் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். எதிர்ப்பையும் மீறி கடந்த 23-ம் தேதி பியூட்டலின் தனது உறவினர்கள் முன்னிலையில் சரண்யாவைத் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இதனையடுத்து தனது மகளைக் காணவில்லை என்று சரண்யாவின் குடும்பத்தார் வெள்ளிச்சந்தை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இவர்களைத் தேடி பியூட்டலின் வீட்டிற்கு வந்த போலீசார், விசாரணைக்கு திருமணமான காதல் ஜோடியை அழைத்து வரும்படி கூறிச் சென்று விட்டனர். காவல்துறையினரின் விசாரணைக்காக 25-ம் தேதி பியூட்டலின் அவரது மனைவி சரண்யா மற்றும் உறவினர்களுடன் காவல் நிலையத்திற்கு சென்றுள்ளனர். அப்போது காவல் நிலையத்திற்கு வெளியே பதுங்கியிருந்த பெண்ணின் உறவினர்கள் இவர்களை சுற்றி வளைச்சி பியூட்டலினை சரமாரியாக தாக்கியதோடு சரண்யாவை அருகிலிருந்த காரில் ஏற்றிக் கொண்டு சென்றதாக தெரிகிறது.

இதில் காயமடைந்த பியூட்டலின் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். தனது மருமகளை அவரது உறவினர்கள் கொலை செய்ய வாய்ப்புள்ளதாக பியூட்டலின் தாயார் தெரிவித்து கன்னியாகுமரி மாவட்ட காவல்கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். விசாரணைக்காக காவல்நிலையம் வந்த திருமணமான காதல் ஜோடியை காவல் நிலையத்தில் வைத்தே தாக்கி பெண்ணை கடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

போப் பிரான்சிஸ் உடல் நல்லடக்கம்! உலக நாட்டு தலைவர்கள் நேரில் மரியாதை!

போப் பிரான்சிஸ் உடல் நல்லடக்கம்! உலக நாட்டு தலைவர்கள் நேரில் மரியாதை!

வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…

11 hours ago

“ஓட்டு மட்டுமே குறிக்கோள் இல்லை., மக்களோடு பேசுங்கள்!” விஜய் கொடுத்த ‘குட்டி’ அட்வைஸ்!

கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…

12 hours ago

ஈரான் துறைமுகத்தில் பயங்கர வெடி விபத்து! 300க்கும் மேற்பட்டோர் காயம்!

தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…

13 hours ago

தவெக பூத் கமிட்டி கருத்தரங்கில் சிறிய தீ விபத்து? “ஒதுங்கி நில்லுங்கள்!” விஜய் அட்வைஸ்!

கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…

13 hours ago

தவெக பூத் கமிட்டி கருத்தரங்கு.., என்ன பேசப்போகிறார் விஜய்?

கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…

14 hours ago

கட்டாய கடன் வசூல்., 3 ஆண்டுகள் சிறை! புதிய சட்ட மசோதா விவரங்கள் இதோ…

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…

16 hours ago