எஸ்ஆர்எம் மருத்துவமனையில் கோவாக்ஸின் தடுப்பூசிக்கான இரண்டாம் கட்ட பரிசோதனை இன்று முதல் ஆரம்பம் .!

Published by
Ragi

கொரோனா தடுப்பு மருந்தான கோவாக்ஸின் தடுப்பூசிக்கான இரண்டாம் கட்ட பரிசோதனை  இன்று முதல் எஸ்ஆர்எம் மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கொரோனா வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்த கோவாக்ஸின் என்ற தடுப்பூசியை ஐதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் கண்டுபிடித்து, அதன் பல்வேறு கட்ட சோதனைகளுக்கு பின்னர் முதலில் விலங்குகளுக்கு அளித்து பரிசோதனை செய்யப்பட்டு வெற்றி அடைந்ததால், இதற்கு இந்திய மருந்து கட்டுபாட்டு தலைமையகம் ஒப்புதல் அளித்தது. அதனை தொடர்ந்து ஐசிஎம்ஆர் கோவாக்ஸின் தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் கோவாக்ஸினை ஆகஸ்ட் 15 முதல் செயல்பாட்டிற்கு கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்ய நாடு முழுவதும் 12 மருத்துவமனைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதில் தமிழகத்தில் உள்ள எஸ்ஆர்எம் மருத்துவ கல்லூரி மருத்துவமனை,  டெல்லி, பாட்னா, பெல்காம், நாக்பூர், கொரோக்பூர், ஹைதராபாத், ஆர்யா நகர், கான்பூர், ரோஹ்டாக் மற்றும் கோவா ஆகிய இடங்களில் உள்ள மருத்துவமனைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

அந்த வகையில் எஸ்ஆர்எம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ள ஆராய்ச்சி மையத்தில், முதற்கட்டமாக ஆரோக்கியமான உடல்நிலையில் உள்ள 10 பேருக்கு கொரோனா தடுப்பு மருந்தான கோவாக்ஸினை கடந்த மாதம் 23-ம் தேதி செலுத்தப்பட்டு, அவர்கள் 14 நாட்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டனர்.

இந்த நிலையில், இரண்டாவது கட்ட பரிசோதனை எஸ்ஆர்எம் மருத்துவமனையில்  இன்று முதல் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்ட பரிசோதனை வெற்றி அடைந்ததால் இரண்டாம் கட்ட பரிசோதனையில் 2 பேருக்கு கோவாக்ஸின் தடுப்பூசி போடப்பட்டு தொடங்கப்பட்டது .

Published by
Ragi

Recent Posts

ஆசிய கோப்பையில் இருந்து இந்தியா விலகலா? பிசிசிஐ சொல்வதென்ன?ஆசிய கோப்பையில் இருந்து இந்தியா விலகலா? பிசிசிஐ சொல்வதென்ன?

ஆசிய கோப்பையில் இருந்து இந்தியா விலகலா? பிசிசிஐ சொல்வதென்ன?

டெல்லி : ஆசியக் கோப்பையில் இருந்து இந்தியா விலகுவதாக வெளியான செய்திகளை பிசிசிஐ செயலாளர் தேவ்ஜித் சைகியா திட்டவட்டமாக நிராகரித்துள்ளார். அடுத்த…

36 minutes ago
சர்ச்சை பேச்சு: ”மன்னிப்பை ஏற்க முடியாது” – அமைச்சர் விஜய் ஷாவுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்.!சர்ச்சை பேச்சு: ”மன்னிப்பை ஏற்க முடியாது” – அமைச்சர் விஜய் ஷாவுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்.!

சர்ச்சை பேச்சு: ”மன்னிப்பை ஏற்க முடியாது” – அமைச்சர் விஜய் ஷாவுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்.!

டெல்லி : பஹல்காமில் நமது மகள்களின் நெற்றிக் குங்குமத்தை அழித்தவர்களுக்கு, அவர்களின் சொந்த சகோதரியைக் கொண்டே பாடம் கற்பித்துள்ளோம் என…

1 hour ago
எப்போது உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.? தென்மண்டல தலைவர் அமுதா விளக்கம்.!எப்போது உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.? தென்மண்டல தலைவர் அமுதா விளக்கம்.!

எப்போது உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.? தென்மண்டல தலைவர் அமுதா விளக்கம்.!

சென்னை : மத்திய கிழக்கு அரபிக் கடலில் வரும் 22ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது.…

2 hours ago
காருக்குள் கருகிய நிலையில் சடலம்.., தூத்துக்குடி அருகே பெரும் பரபரப்பு.!காருக்குள் கருகிய நிலையில் சடலம்.., தூத்துக்குடி அருகே பெரும் பரபரப்பு.!

காருக்குள் கருகிய நிலையில் சடலம்.., தூத்துக்குடி அருகே பெரும் பரபரப்பு.!

தூத்துக்குடி மாவட்டத்தில், காருக்குள் கருகிய நிலையில் ஒரு சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு…

2 hours ago
தமிழ்நாட்டில் மஞ்சள் எச்சரிக்கை! இன்றும், நாளையும் மிக கனமழை – வானிலை மையம்.!தமிழ்நாட்டில் மஞ்சள் எச்சரிக்கை! இன்றும், நாளையும் மிக கனமழை – வானிலை மையம்.!

தமிழ்நாட்டில் மஞ்சள் எச்சரிக்கை! இன்றும், நாளையும் மிக கனமழை – வானிலை மையம்.!

சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி…

2 hours ago
சடசடவென திருமணத்திற்கு ரெடியாகும் விஷால்! பொண்ணு இந்த நடிகையா?சடசடவென திருமணத்திற்கு ரெடியாகும் விஷால்! பொண்ணு இந்த நடிகையா?

சடசடவென திருமணத்திற்கு ரெடியாகும் விஷால்! பொண்ணு இந்த நடிகையா?

சென்னை : நடிகர் விஷால் எதாவது நிகழ்ச்சிக்கு சென்றாலே அவரிடம் அடுத்த என படம் நடிக்கிறீர்கள் என்று கேட்பதை விட உங்களுக்கு…

5 hours ago