கல்லூரி மாணவியருக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் இன்று தொடங்கி வைக்கிறார்.
அரசுப் பள்ளிகளில் படித்து கல்லூரிகளில் பயிலும் மாணவியருக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தை சென்னையில் இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். இந்த நிகழ்ச்சியில் டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் பங்கேற்கிறார். தமிழகத்தில் ஏற்கனவே செயல்பட்டு வந்த மூவலுார் ராமாமிர்தம் அம்மையார் மகளிர் திருமண உதவித்திட்டம், அதிமுக ஆட்சியில் ‘தாலிக்கு தங்கம்’ திட்டமாக மாற்றப்பட்டது.
திமுக ஆட்சிக்கு வந்த நிலையில், தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் ரத்து செய்யப்பட்டு, உயர்கல்வி கற்கும் மாணவியருக்கு, உயர்கல்வி உறுதி திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டத்தில் அரசு பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்து முடித்து, உயர்கல்வியில் சேரும் மாணவியருக்கு மட்டும், மாதம் ரூ.1,000 உதவி தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து உதவி தொகை பெற விரும்பும் மாணவியரின் விபரங்கள் ஆன்லைனில் சேகரிக்கப்பட்டன. அதன்படி, அரசு பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்து முடித்த மாணவியர் என 2.5 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். இதில், முதற்கட்டமாக 60 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டு, கல்வி உதவி தொகை வழங்கப்பட உள்ளது. இந்த திட்டத்திற்கு புதுமைப்பெண் திட்டம் என தமிழக அரசு பெயர் சூட்டியுள்ளது. இந்த நிலையில், கல்லூரி மாணவியருக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் இன்று தொடங்கி வைக்கிறார். இந்த உதவித்தொகை நேரடியாக மாணவிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…
ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…