கரூரில் ஆயுத பூஜையை முன்னிட்டு சாலையோர மைல்கல்லுக்கு படையலிட்டு பூஜை செய்த சாலை பணியாளர்கள்.
இன்று ஆயுத பூஜையை முன்னிட்டு, தொழிலாளர்கள், தாங்கள் பணிக்காக பயன்படுத்தும் பொருட்களுக்கு பூஜை செய்வது வழக்கம். அந்த வகையில், கரூரில் சாலை பணியாளர்கள் செய்துள்ள பூஜை பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
கரூர் மாவட்டம் உப்பிடமங்கலம் அருகே, புலியூர் – வையம்பட்டி மாநில நெடுஞ்சாலையில் பணிபுரியும் சாலை பணியாளர்கள், சாலையோர மைல் கல்லுக்கு படையலிட்டு, பூஜை செய்து ஆயுத பூஜையை கொண்டாடினர். சாலை ஓரத்தில் உள்ள மைல் கல்லை தூய்மைபடுத்தி திருநீறு, சந்தனம், குங்குமம் இட்டு, மாலை அணிவித்தனர். பின்னர் சுண்டல், பொரிகடலை, தேங்காய், பழம் ஆகியவற்றை படையலிட்டு, தீபாராதணை காட்டி ஆயுத பூஜையை கொண்டாடினர். சாலை பணியாளர்களின் இந்த செயல் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
சென்னை : தொலைக்காட்சி நிலையத்தின் "இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா" மற்றும் சென்னைத் தொலைக்காட்சியின் பொன்விழா கொண்டாட்டங்கள் இன்று…
சேலம் : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டி பகுதியில் வரும் அக்டோபர் 27-ஆம் தேதி நடைபெற…
சென்னை : வங்க கடலில் இதற்கு முன்னர் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று அதிகாலை கரையைக் கடந்தது.…
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதைப்போல, மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளின்…
வாஷிங்க்டன் : இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இடையே கடந்த ஒரு வருடமாகப் போர் நடைபெற்று வருகிறது. இதில், இஸ்ரேல் தொடுத்த தாக்குதலில்…
விழுப்புரம் : நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் இன்று விழுப்புரத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்வில் கலந்து கொண்டு பின்னர்…