தமிழ்நாட்டில் வேட்புமனு மீதான பரிசீலனை நிறைவு!

Published by
பாலா கலியமூர்த்தி

Election2024 : தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளில் வேட்புமனு மீதான பரிசீலனை நிறைவு பெற்றது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள மொத்தம் 40 தொகுதிகளில் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த வாரம் தொடங்கிய நிலையில் நேற்றுடன் நிறைவு பெற்றது. அதன்படி, தமிழகத்தில் 800க்கும் மேற்பட்டோர் வேட்புமனு தாக்கல் செய்திருந்ததாக கூறப்பட்டது.

இதையடுத்து இன்று காலை முதல் தமிழ்நாட்டில் 39 தொகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்ற வேட்புமனு மீதான பரிசீலினை நிறைவு பெற்றுள்ளது. அதன்படி, சேலத்தில் 39 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில், 27 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டது. இதில் 12 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டது.

கோவை தொகுதியில் 59 பேர் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், 41 மனுக்கள் ஏற்கப்பட்டது, 18 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. தேனி தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட 43 மனுக்களில் 35 மனுக்கள் ஏற்கப்பட்ட நிலையில், 8 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. ராமநாதபுரத்தில் 6 பன்னீர்செல்வம் உட்பட 36 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில், 28 பேரின் வேட்புமனு ஏற்கப்பட்டது.

இதுபோன்று தமிழகம் முழுவதும் பல்வேறு தொகுதிகளில் தகுதியுள்ள வேட்புமனுக்களை ஏற்கப்பட்டு, சில வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன. அதேசமயம் சில இடங்களில் வேட்மனுக்கள் நிறுத்தி வைக்கப்பட்டது. எனவே, வேட்புமனுக்களை திரும்ப பெற நாளை மறுநாள் கடைசி நாளாகும்.

Recent Posts

LSG vs PBKS : லக்னோவுக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் பவுலிங் தேர்வு!

லக்னோ : இன்று (ஏப்ரல் 1) நடைபெறும் ஐபிஎல் 2025 சீசனின் 13வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ்…

41 minutes ago

வடிவேலு – சுந்தர்.சியின் அடுத்தடுத்த காமெடி அட்டகாசம்.., கேங்கர்ஸ் படத்தின் புதிய ட்ரைலர் இதோ…

சென்னை : தமிழ் சினிமாவில் கமர்சியல் படங்கள் மூலம் எடுத்து ஹிட் கொடுத்து சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குனர்…

2 hours ago

“எங்கள் ஊரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் சொல்லி தருகிறோம்..,” யோகி ஆதித்யநாத் பெருமிதம்!

லக்னோ :  தேசிய கல்வி கொள்கை 2020-ல் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய கோட்பாடுகளில் ஒன்று மும்மொழி கொள்கை. இந்த மும்மொழி கொள்கை…

2 hours ago

வழக்கு தொடர்ந்த பாஜக நிர்வாகி.. ‘எம்புரான்’ படத்திற்கு தடை விதிக்க கேரள உயர்நீதிமன்றம் மறுப்பு.!

கேரளா : மலையாள நடிகர் மோகன்லாலின் ''எம்புரான்'' படம் ஒரு புறம் வசூல் சாதனை செய்தாலும், மறுபுறம் சர்ச்சைகளால் சூழந்துள்ளது.…

3 hours ago

அப்போ தோனி., இப்போ ரோஹித்! பங்கமாய் கலாய்க்கும் நெட்டிசன்கள்!

சென்னை : ஐபிஎல் திருவிழா ஆரம்பித்துவிட்டது. அதில் வழக்கம் போல புதிய இளம் வீரர்கள் நட்சத்திரங்களாக ஜொலிக்க ஆரம்பித்துள்ளனர். அவர்களுடன்…

3 hours ago

ஜப்பானை காலி செய்ய காத்திருக்கும் பெரிய ஆபத்து – 3 லட்சம் மக்கள் உயிரிழக்க வாய்ப்பு.!

ஜப்பான் : மியான்மர்-தாய்லாந்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பேரழிவின் அதிர்ச்சியிலிருந்து உலகம் இன்னும் மீளவில்லை. அதற்குள் ஜப்பான் ஒரு பெரிய…

4 hours ago