விளம்பரத்தால் ஏற்பட்ட விளைவு.! ரூ.6 கோடி பணத்தை திரும்பப் பெற்ற பொதுமக்கள்.! காரணம் இதுவா.?

Published by
பாலா கலியமூர்த்தி
  • தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் கேஒய்சி(KYC) விதியில் என்பிஆர்(NRP) ஆவணத்தையும் பயன்படுத்தலாம் என்று விளம்பரம் ஒன்று வெளியிட்டது.
  • வங்கியின் அந்த விளம்பரத்தால் அதிர்ச்சியடைந்த மக்கள் வங்கியில் தங்கள் டெபாசிட் பணமான ரூ.6 கோடியைத் திரும்பப் பெற்றுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினத்தில் என்ற கிராமத்தில் சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா வங்கி செயல்பட்டு வருகிறது. இதில் சுமார் 4 ஆயிரம் வாடிக்கையாளர்கள் இங்கு கணக்கு வைத்துள்ளனர். என்னினும், கே.ஒய்.சி. படிவம் மூலம் ஆண்டுதோறும் வாடிக்கையாளர்கள் விபரம் சேகரிக்கப்பட்டு ஒழுங்குபடுத்துவது வழக்கம். இதனிடையே வங்கியின் மும்பை தலைமை அலுவலகம் சார்பில் ரிசர்வ் வங்கி வாடிக்கையாளர்களுக்கு சில நிபந்தனைகள் தொடர்பாக கடந்த ஜன.11-ம் தேதி பொது அறிவிப்பு விளம்பரம் வெளியிடப்பட்டது. அதில் அண்மையில் கே.ஒய்.சி. ஆவணங்கள் சமர்ப்பிக்காது இருந்தால், அதனை உடனடியாக சமர்பிக்கும்படி கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

அதில் அண்மையில் கே.ஒய்.சி. ஆவணங்கள் சமர்ப்பிக்காது இருந்தால், அதனை உடனடியாக சமர்பிக்கும்படி கேட்டு கொள்ளப்படுகிறார்கள். தங்களது கணக்கு தடைபடாத சேவைக்கு, கேஒய்சி(KYC) விதிமுறையில் வங்கிக் கணக்கு தொடங்க கேட்கப்படும் ஆவணங்களில் ஒரு ஆவணமாக என்பிஆர் (NRP) தேசிய குடிமக்கள் பதிவேட்டில் வழங்கப்பட்ட கடிதம் ஆகியவற்றை சம்பந்தப்பட்ட வங்கி கிளையில் ஆவணத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும், இது கட்டாயமில்லை என்றும், தெளிவாகக் குறிப்பிட்டிருந்தது. மேலும் ஜனவரி 31, முன் சமர்ப்பிக்க வேண்டும் எனவும், சமர்ப்பிக்காத வங்கி வாடிக்கையாளர்களின் பண பரிவர்த்தனை முடக்கி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனை கண்ட காயல்பட்டினம் பொதுமக்கள் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, வங்கியில்  தாங்கள் செய்திருந்த டெபாசிட் பணத்தை திரும்ப எடுக்க திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், கடந்த ஒருவாரத்தில் இதுவரை ரூ.6 கோடி வரை மக்கள் தங்கள் டெபாசிட்டை திரும்பப் பெற்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கி்ன்றன. இதுகுறித்து வங்கியின் மேலாளர் மாரியப்பன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், கடந்த ஒருவாரத்தில் இதுவரை ரூ.6 கோடி பணத்தை மக்கள் திரும்பப் பெற்றுள்ளனர். பெரும்பாலும் பெண்கள்தான் அதிகமாகப் பணத்தை திரும்பப் பெற்று, குறைந்த இருப்புத் தொகையை மட்டுமே வைத்துள்ளார்கள்  எனத் தெரிவித்தார். கடந்த வியாழக்கிழமை மட்டும் ஏறக்குறைய ரூ.50 லட்சம் பணம் திரும்பப் பெறப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து வங்கி அதிகாரிகள் மக்களைச் சமாதானம் செய்தும், என்பிஆர் ஆவணம் கட்டாயம் இல்லை எனக் கூறியும், கேட்காமல் மக்கள் பணத்தைத் திரும்பப் பெற்றனர். மேலும், கடற்கரை கிராமமான காயல்பட்டினத்தில் பெரும்பாலும் முஸ்லிம் சமூகத்தினரே அதிகமாக வசிக்கின்றனர். இங்குள்ள வீடுகளில் குடும்ப உறுப்பினர்கள் பெரும்பாலும் வெளிநாடுகளில் பணியில் இருப்பதால், வங்கி மூலம் அதிகமான பணப் பரிமாற்றம் நடக்கும். ஏற்கெனவே என்பிஆர், என்ஆர்சி மற்றும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு முஸ்லிம்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு உருவாகி இருக்கும் நிலையில், வங்கியின் விளம்பரம் பணத்தைத் திரும்பப் பெற முக்கியக் காரணமாக இருக்கிறது எனக் கூறப்படுகிறது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

54 mins ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

57 mins ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

1 hour ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

1 hour ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

1 hour ago

தமிழகத்தில் (23.09.2024) திங்கள் கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

2 hours ago