தமிழகம் இந்தியாவிலேயே முன்னணியில் திகழ காரணம் தன்னலமற்ற ஆசிரியர்களின் கடின உழைப்பே – துணை முதல்வர் வாழ்த்து.!

Published by
Ragi

 இன்று ஆசிரியர் தினம் கொண்டாடுவதையொட்டி அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்களை துணை ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

ஆசிரியராக பணியை தொடங்கி குடியரசு தலைவராக உயர்ந்த Dr. S. இராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாளான செப்டம்பர் 5-ஆம் தேதி ஆசிரியர் தினமாக ஆண்டு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் மாணவர்களுக்கு கல்வியறிவு புகட்டி சிறந்த சமூகத்தை உருவாக்கும் ஆசிரியர்களுக்கு தனது ஆசிரியர் தின நல்வாழ்த்துக்களை துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

அவர்  ட்விட்டர்  பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில், அறிவுலகம் போற்றுகின்ற சிந்தனை செம்மன், ஆன்றோரும் சான்றோரும் புகழ்ந்து போற்றும் தத்துவ மேதை. ஆசிரியராக வாழ்க்கையை தொடங்கி நாட்டின் உயர் பதவியான குடியரசுத் தலைவர் பதவியை அலங்கரித்த தமிழ் மகன் பெருமைக்குரிய டாக்டர். எஸ். இராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாளை ஆசிரியர் தினமாக கொண்டாடுகிறோம். ‘கல்வி சிறந்த தமிழ்நாடு’ என்னும் மகாகவி பாரதியின் சொல்லை மெய்யாக்கி தமிழகத்தை தலை நிமிர்ந்து நடைபோட செய்தவர் இதய தெய்வம் புரட்சி தலைவி மாண்புமிகு அம்மா அவர்கள். உயர்கல்வியில் தமிழகம் இந்தியாவிலேயே முன்னணியில் திகழக் காரணம் தன்னலமற்ற ஆசிரியர்களின் கடின உழைப்பே ஆகும். மாண்புமிகு அம்மா அவர்கள் காட்டிய வழியில் இந்த கடினமான காலக்கட்டத்தில் பல புதிய கல்வித் திட்டங்களை செயல்படுத்தி மாணவர்கள் தங்கள் பாடங்களை வீட்டில் இருந்தபடியே எளிதாக கற்றுக் கொள்ள ஏற்பாடு செய்துள்ளது. வருங்கால தமிழகம் ஒளிமயமாக திகழ பொறுப்புணர்வுடன் கூடிய அறிவார்ந்த இளைஞர் சமுதாயத்தை உருவாக்கிய பொறுப்பு ஆசிரிய பெருமக்களாகிய உங்கள் திருக்கரங்களுக்கு உள்ளது. கற்பித்தலை தாண்டி மனித நேயத்துடன் சேவையாற்றி தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் அத்துணை ஆசிரியர் பெருமக்களுக்கும் இத்தருணத்தில் என் மனமார்ந்த வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறேன் என்று வீடியோவில் தெரிவித்துள்ளார்.

Published by
Ragi

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

15 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

15 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

16 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

16 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

16 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

16 hours ago