மின் தடை ஏற்பட காரணம் முன்னாள் அரசுதான் – அமைச்சர் செந்தில் பாலாஜி..!

Default Image

பராமரிப்பு பணிகள் கடந்த 9 மாத காலமாக இல்லாததே அடிக்கடி மின் தடை ஏற்பட காரணம் அதற்கு காரணம் முன்னாள் இருந்த அரசுதான் காரணம் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணாசாலையில் மின் நுகர்வோர் சேவை மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அப்போது மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உடனிருந்தார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, மின்மிகை மாநிலம் சொல்லும்போது ஏன் பராமரிப்பு பணிகள் செய்யவில்லை. பராமரிப்புப் பணிகளால் தான் மின் தடை ஏற்படுகிறது என்பதை முன்னாள் அமைச்சர் புரிந்து கொள்ள வேண்டும்.

பராமரிப்பு பணிகள் கடந்த 9 மாத காலமாக இல்லாததே அடிக்கடி மின் தடை ஏற்பட காரணம் அதற்கு காரணம் முன்னாள் இருந்த அரசுதான் இதை முன்னாள் அமைச்சர் தங்கமணிஒப்புக்கொள்ள வேண்டும். விண்டு மில் ஓடும்போது எப்படி மின் தடை வரும் என கேட்கிறார்கள். நான் கேட்கறேன் பராமரிப்பு இல்லையென்றால் விண்டு மில் எப்படி பயன்படுத்த முடியும், மின் சப்ளை எப்படி கொடுக்க முடியும்.

முன்னாள் அமைச்சர் மாவட்டத்திலே பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன என தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்