ரயில்களில் கட்டுப்பாடுகளுடன் உணவு விற்க அனுமதி- இரயில்வே அறிவிப்பு

Published by
Kaliraj
ரயில்களில் உணவு விற்க இரயில்வே நிர்வாகம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
கொரோனா பரவலைத் தடுக்க  நாடெங்கும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் பயணிகள் ரெயில் சேவை கடந்த மார்ச்.,22ம்  தேதி முதல் நிறுத்தப்பட்டது.
தற்போதுஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் மே., 12ந்தேதி முதல் தலைநகர் டெல்லியை நாட்டின் பிற பகுதிகளோடு இணைக்க 15 ஜோடி பிரிமியம் ராஜ்தானி சிறப்பு ரெயில்களை ஜூன் 1ந்தேதி முதல் 100 ஜோடி தொலைவிட ரெயில்களையும் ரெயில்வே நிர்வாகம் இயக்க தொடங்கியது.
இதற்கு அடுத்தகட்டமாக  தீபாவளி பண்டிகை வருவதால் அக்.,15 தேதி முதல் நவ.,30 தேதி வரையில் பண்டிகை காலம் என்பதால் 200 சிறப்பு ரெயில்களை இயக்க திட்டமிட்டு உள்ளதாக ரெயில்வே வாரிய தலைவர் வி.கே.யாதவ் அறிவித்தார். இவரின் அறிவிப்பு பயணிகளிடையே வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் பயணிகளின் வசதிகளுக்காக ரெயில் நிலைய பிளாட்பாரங்களில் அமைந்துள்ள உணவகங்கள், கடைகளில் சமைக்கப்பட்ட உணவுகளை விற்பனை செய்ய நிர்வாகம் அனுமதித்துள்ளது.
இது குறித்த  அறிவிப்பை இந்திய ரெயில்வே உணவு வழங்கல் மற்றும் சுற்றுலா கழகம் ஐ.ஆர்.சி.டி.சி. வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் இடம் பெற்றுள்ளவைகள் பின்வருமாறு:-செப்.,30ந்தேதி வரையில் 10% உரிம கட்டணத்தில் செயல்பட அனுமதிக்கப்பட்ட ரெயில் நிலைய பிளாட்பாரங்களில் உணவு பிளாசாக்கள், துரித உணவு பிரிவுகள், ஜன ஆஹார்கள், உணவகங்கள், அக்., 31தேதி வரை 20% உரிம கட்டணத்துடன் இயங்குவதற்கு ரெயில்வே மண்டலங்கள் அனுமதிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.மேலும் சமைக்கப்பட்ட உணவுகளை பார்சல்களாக மட்டுமே விற்க வேண்டும்.ரெயில் நிலைய பிளாட்பாரங்களில் அமைந்துள்ள உணவகங்களில், கடைகளில், ஸ்டால்களில் பயணிகள் யாரும் அமர்ந்து சாப்பிடுவதற்கு அனுமதி இல்லை என்று தெரிவித்துள்ளது.மேலும் இப்படிப்பட்ட ஓட்டல்கள், கடைகளை நடத்துவதற்கு மார்ச்23 தேதி வரை வழங்கப்பட்டிருந்த ஒப்பந்தங்கள் முடிந்துவிட்டது.ஆகவே 20% உரிம கட்டணத்தை செலுத்தி அக்.,31ந்தேதி வரை செயல்பட அனுமதிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
 

Recent Posts

திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து தினந்தோறும் படுகொலைகள்…அண்ணாமலை ஆவேசம்!

திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து தினந்தோறும் படுகொலைகள்…அண்ணாமலை ஆவேசம்!

சென்னை : சேலம் மாவட்ட சரித்திர பதிவேடு குற்றவாளி ரவுடி ஜான் எனும் சாணக்யாவை மர்ம கும்பல் ஒன்று இன்று அவரது…

2 hours ago

மங்களகரமா பாட்டுல ஆரம்பிக்கிறோம்! வாடிவாசல் படத்தின் தரமான அப்டேட்!

சென்னை : சூர்யா ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் தனியாக ஒரு படத்தில் நடிக்க எந்த அளவுக்கு எதிர்பார்ப்பு இருக்கிறதோ அதே அளவுக்கு அவர்…

2 hours ago

சுனிதா வில்லியம்ஸுக்கு பாரத ரத்னா கொடுங்க! முதல்வர் மம்தா பானர்ஜி வேண்டுகோள்!

மேற்கு வங்கம் : ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு ஆய்வு பணிகளுக்காக இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி…

4 hours ago

பஞ்சாப் ரொம்ப உக்கிரமா இருப்போம்! எதிரணிக்கு எச்சரிக்கை விட்ட பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்!

பஞ்சாப் : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ள நிலையில், போட்டியில் விளையாடும் அணிகள்…

5 hours ago

இந்த வருஷம் ஒன்னில்ல.., மொத்தம் 13.! களைகட்டும் ஐபிஎல் திருவிழா!

டெல்லி : இந்த வருட ஐபிஎல் (IPL 2025) திருவிழா வரும் மார்ச் 22ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன்…

5 hours ago

வானதி சீனிவாசன் கேட்ட கேள்வி…அண்ணாமலையை சீண்டி பதிலடி கொடுத்த அமைச்சர் செந்தில் பாலாஜி..!

சென்னை : டாஸ்மாக் டெண்டர்களில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில் பாலாஜி…

6 hours ago