பொதுக்குழு திட்டமிட்டபடி நடைபெறும்.. முன்னாள் அமைச்சர் காரை முற்றுகையிட்ட ஓபிஎஸ் ஆதரவாளர்கள்!

Published by
பாலா கலியமூர்த்தி
பொதுக்குழு தீர்மானங்கள் குறித்து ஆலோசனையை முடித்துவிட்டு ஜெயக்குமார் புறப்பட்டபோது ஓபிஎஸ் ஆதரவாளர்கள் முழக்கம்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று கட்சியின் மூத்த நிர்வாகிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர். அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானங்கள் பற்றி ஆலோசனை நடத்தியதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் வளர்மதி, சிவி சண்முகம் எம்பி, வகைச்செல்வன், செம்மலை, ஆர்பி உதயகுமார், பொன்னையன் மற்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த நிலையில், ஆலோசனை கூட்டம் முடிந்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. திட்டமிட்டபடி பொதுக்குழு ஜூன் 23-ஆம் தேதி நடைபெறும். ஒற்றை தலைமை குறித்து, ஒருங்கிணைப்பாளர்கள், நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் என அனைவரும் சேர்ந்து முடிவு செய்வோம். ஒற்றை தலைமை பொறுப்புக்கு குறிப்பிட்ட நபரை யாரும் சொல்லவில்லை.
யாருடைய மனமும் புண்படும் வகையில் யாரும் வேறுபாடு காட்டமாட்டார்கள். அதனால் எந்த முடிவாக இருந்தாலும் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் தான் எடுக்கப்படும். ஓபிஎஸ் கட்சி அலுவலகம் வருகைக்கும் அதிமுக தீர்மான குழு கூட்டம் நிறைவுக்கும் சம்பந்தமில்லை என்று தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து புறப்பட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் காரை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டு முழக்கங்களை எழுப்பினர். அதிமுகவை ஜெயக்குமார் அழித்துக் கொண்டிருப்பதாக கட்சி அலுவலகத்தின் வெளியே ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் முழக்கமிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
எனவே, அதிமுகவில் ஒற்றை தலைமை குறித்த பேச்சு தொடங்கியதில் இருந்து ஒரே பரபரப்பாக காணப்படுகிறது. ஒற்றை தலைமை குறித்த சர்ச்சை அதிமுகவில் வலுத்துள்ள நிலையில் கட்சி அலுவலகம் சென்றுள்ளார் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம். ஓ.பி.எஸ். வருகையை அறிந்த எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவான நிர்வாகிகள், ஆலோசனை கூட்டத்தை முன்கூட்டியே முடித்துக்கொண்டு புறப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி சேலம் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

9 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

9 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

9 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

10 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

10 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

10 hours ago