தேர்தலில் வெற்றி பெற்றால் 100 நாட்களில் திட்டங்கள் நிறைவேற்றப்படும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற இன்னும் 2 நாட்களே உள்ளது. தேர்தல் பிரச்சாரம் நாளை 7 மணியுடன் நிறைவடைய உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் தங்கல் ஆதரவாளர்களை ஆதரித்தும், தாங்கள் போட்டியிடும் தொகுதியிலும் இறுதி கட்ட பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், கோவை தெற்கு தொகுதியில் பரப்புரை மேற்கொண்ட போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், தேர்தலில் வெற்றி பெற்றால் 100 நாட்களில் திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்றும் தேவை அனைத்தையும் ஒரே நேரத்தில் நிறைவேற்ற முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
நல்ல அரசியலுக்கு முன்னுதாரணமாக கோவை தெற்கு தொகுதி மாறவேண்டும். அது தான் என்னுடைய விருப்பம் என கூறி, மக்களுக்கு என்ன தேவையோ, எது முதலில் முக்கியமோ அதை மக்கள் உணர்ந்ந்து பட்டியலிட்டு சொல்ல வேண்டும் என்றும் அதை மக்களின் உதவியுடன் செயல்படுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…