மக்களுக்கு மருத்துவ சேவை வழங்குவதில் புதிய மறுமலர்ச்சியை இத்திட்டம் ஏற்படுத்தும் – அன்புமணி ராமதாஸ்

Published by
லீனா

மக்களுக்கு மருத்துவ சேவை வழங்குவதில் புதிய மறுமலர்ச்சியை இத்திட்டம் ஏற்படுத்தும்.

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கடந்த ஆண்டு சுதந்திர தின உரையில் மின்னணு மருத்துவ திட்டம் நாடு முழுவதும் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவித்திருந்த நிலையில், தேசிய டிஜிட்டல் சுகாதார திட்டத்தை டெல்லியில் இருந்து காணொலியில் பிரதமர் தொடங்கி வைத்தார்.

டிஜிட்டல் சுகாதார திட்டத்தின் மூலம் ஒவ்வொரு நபருக்கும் ஐடி, அடையாள எண் உருவாக்கப்பட்டு அட்டை தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், இந்திய மக்கள் அனைவருக்கும் அவர்களின் மருத்துவ விவரங்களுடன் கூடிய மருத்துவ அடையாள அட்டை வழங்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தொடங்கி வைத்திருக்கிறார். மக்களுக்கு மருத்துவ சேவை வழங்குவதில் புதிய மறுமலர்ச்சியை இத்திட்டம் ஏற்படுத்தும்.

இந்திய மக்கள் எங்கும், எந்நேரமும் மருத்துவம் பெறுவதற்கு உதவும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் என பா.ம.க. வலியுறுத்தி வந்தது. நிழல் நிதிநிலை அறிக்கையிலும் அறிவித்தது. அந்தத் திட்டம் செயல்பாட்டுக்கு வந்திருப்பதில் மிக்க மகிழ்ச்சி!’ என பதிவிட்டுள்ளார்.

Recent Posts

காஷ்மீர் தாக்குதல் : “விசாரணைக்கு நாங்கள் தயார்!” பாகிஸ்தான் திடீர் அறிவிப்பு!

காஷ்மீர் தாக்குதல் : “விசாரணைக்கு நாங்கள் தயார்!” பாகிஸ்தான் திடீர் அறிவிப்பு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம்தாக்குதலில் 26 இந்தியர்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு TRF எனும் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று இருந்தது.…

21 minutes ago

சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து! 3 பேர் உயிரிழப்பு!

விருதுநகர் : பட்டாசு ஆலையில் தீ விபத்து சம்பவங்கள் அவ்வப்போது நடைபெறுவது தொடர் கதையாகி வருகின்றன. இன்றும் சிவகாசி அருகே…

1 hour ago

பாகிஸ்தான் அதிகாரியின் ‘கழுத்தறுப்பு’ சைகையால் வெடித்த சர்ச்சை! வைரலாகும் வீடியோ…

லண்டன் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர்…

2 hours ago

திறந்தவெளி வாகனத்தில் விஜய்., ஸ்தம்பித்த கோவை விமான நிலையம்!

கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் அக்கட்சி பூத் கமிட்டி நிர்வாகிகள் கலந்து கொள்ளும்…

3 hours ago

Live : தவெக பூத் கமிட்டி மாநாடு முதல்… இந்தியா – பாகிஸ்தான் எல்லை பதற்றம் வரை…

சென்னை : இன்றும் நாளையும் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில்…

3 hours ago

நள்ளிரவில் எல்லை மீறிய பாகிஸ்தான்! பதிலடி கொடுத்த இந்திய ராணுவம்!

டெல்லி : பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இரு…

3 hours ago