பிரதமர் பதிலுரையில் வார்த்தை ஜாலம் மட்டுமே இருந்தது – முதல்வர் மு.க.ஸ்டாலின்

Published by
லீனா

பிரதமர் பதிலுரையில் வார்த்தை ஜாலம் மட்டுமே இருந்தது என முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் 

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், உங்களில் ஒருவன் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்ற எடப்பாடி பழனிசாமி கருத்துக்கு பதிலளித்த முதல்வர்,  80% தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டோம். மீதமுள்ள வாக்குறுதிகளையும் ஓராண்டுக்குள் நிறைவேற்றுவோம் என தெரிவித்துள்ளார்.

பிரதமர் பதிலுரையில் வார்த்தை ஜாலம்

மேலும், பிரதமர் மோடி குறித்து பேசிய முதல்வர், நாடாளுமன்றத்தில், பிபிசி ஆவணப்படம், அதானி விவகாரம் போன்ற சர்ச்சைகளுக்கு பிரதமர் பதிலளிக்கவில்லை. திமுக எம்.பி-க்களின் கேள்விகளுக்கு பிரதமர் பதில் சொல்லவில்லை என்றும், நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேசியதில் மக்களுக்கான எதுவுமே இல்லை. பிரதமர் பதிலுரையில் வார்த்தை ஜாலம் மட்டுமே இருந்தது என தெரிவித்துள்ளார்.

ராகுல்காந்தி கேள்வி 

ராகுல்காந்தி எழுப்பியுள்ள கேள்விகளுக்கு பிரதமர் மோடி பதிலளிக்காதது அதிர்ச்சியளிக்கிறது. ராகுல்காந்தியின் பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்கியது. நாடாளுமன்ற ஜனநாயக மரபுகளுக்கு எதிரானது.

ஆன்லைன் ரம்மி 

ஆன்லைன் ரம்மியால் நிகழும் தற்கொலைகள் பற்றி ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தெரியவில்லையா? இன்னும் எத்தனை உயிர்கள் பலியானால் அவர் சட்டத்திற்கு கையெழுத்து போடுவார்? ஒருமனதாக நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்ட ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு, கையெழுத்து போடாமல் சட்டமன்றத்தை அவமதிக்கிறார்.  ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்யாமல், அதை அங்கீகரிக்கும் வகையில் ஒன்றிய அரசு வரி விதித்திருப்பது கொடுமையான விஷயம் என தெரிவித்துள்ளார்.

சிறைத் தனிமையைப் போக்கி, குற்றம் செய்தோரையும் நல்வழிப்படுத்தும் புத்தகங்களைச் சிறைவாசிகளுக்கு வழங்கிய பெரியவர் பாலகிருஷ்ணன் போன்றோர் நம் உறவுகளில் பெருக வேண்டும்.

Published by
லீனா

Recent Posts

“அந்த படத்துக்கு பதிலா கொட்டுக்காளி, ஆடுஜீவிதம் படங்களை ஆஸ்காருக்கு அனுப்பியிருக்கலாம்”…வசந்த பாலன் கருத்து!

சென்னை : சினிமா உலகில் மிக உயரிய விருதாக கருதப்படும் விருது என்றால் அது "ஆஸ்கர் விருது" தான். இந்த…

6 mins ago

“24 மணி நேரமும் திரைப்படங்கள் திரையிட அனுமதி.,” தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை.!

சென்னை : தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் அவசர கூட்டம் இன்று காலை 11 மணியளவில் டாக்டர் மல்லிகை தெருவில்…

1 hour ago

லட்டு விவகாரம்., பவன் கல்யாணிடம் மன்னிப்புக் கேட்ட ‘மெய்யழகன்’ கார்த்தி.!

சென்னை : கார்த்தி, அரவிந்த் சாமி நடித்து, '96' பட இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் இந்த வாரம் ரிலீசாக உள்ள…

2 hours ago

மக்களே! தமிழகத்தில் (25.09.2024) புதன்கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 25.09.2024) அதாவது , புதன்கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின் சில…

2 hours ago

பாடகி சுசீலா மற்றும் மேத்தாவுக்கு கலைத்துறை வித்தகர் விருது! தமிழக அரசு அறிவிப்பு !

சென்னை : தமிழ் திரைத்துறையில் 5000திற்கும் அதிகமான பாடல்களை படித்துள்ள பின்னணி பாடகியான சுசீலாவிற்கும், தமிழசினிமா துறையில் வசனகர்த்தாவாக கவிஞர்…

2 hours ago

முதல் படமே காதல்.. “சத்தம் போடாம கத்து” அதர்வா தம்பி – அதிதியின் ‘நேசிப்பாயா’ டீசர்.!

சென்னை : இயக்குனர் விஷ்ணு வர்தனின் 10வது படமான நேசிப்பாயா திரைப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படம் மூலம் மறைந்த…

2 hours ago