மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், நீட் தமிழகத்திற்கு கூடாது என்பது தான் அதிமுக அரசின் எண்ணம்.தமிழகத்திற்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கவேண்டும் என்று தான் விரும்புகிறோம். ஆனால் இந்த நீட் தேர்விற்கு விதை போட்டவர்கள் காங்கிரஸ், திமுக தான்.
எனவே பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டும் நடவடிக்கையை அவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் பொய் சொல்லி வாழ்ந்தவர்கள் இல்லை. மெய் சொல்லி கெட்டவர்கள் இல்லை. எனவே பொய் சொல்பவர்கள் தக்க பலனை பெறுவார்கள்.
ஒரு மாவட்டத்தை பிரிக்க வேண்டும் என்றால் பல கோடி செலவு மற்றும் மிகப்பெரிய பணி இதன் பின்னே உள்ளது. இந்நிலையில் அதிமுக அரசு வரலாற்று சிறப்புமிக்க நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளது.
கிருஷ்னா நதிநீர் தமிழக நீர்தேக்கங்களை நிச்சயம் வந்தடையும். மேலும் தண்ணீர் பிரச்சினை இல்லாத நிலையை உருவாக்க அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.இலங்கை தமிழர் விவகாரத்தில் திமுக பச்சோந்தி போன்று இரட்டை வேடம் போட்டுள்ளது.7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநரை நாம் கட்டாயப்படுத்த முடியாது என்று தெரிவித்தார்.
பெங்களூர் : பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் இன்றைய ஐபிஎல் போட்டி, மழை காரணமாக 14 ஓவர் போட்டியாக…
சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…
பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…
டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…
சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…
சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…