நீட் தமிழகத்திற்கு கூடாது என்பது தான் அதிமுக அரசின் எண்ணம்-அமைச்சர் ஜெயக்குமார்
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், நீட் தமிழகத்திற்கு கூடாது என்பது தான் அதிமுக அரசின் எண்ணம்.தமிழகத்திற்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கவேண்டும் என்று தான் விரும்புகிறோம். ஆனால் இந்த நீட் தேர்விற்கு விதை போட்டவர்கள் காங்கிரஸ், திமுக தான்.
எனவே பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டும் நடவடிக்கையை அவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் பொய் சொல்லி வாழ்ந்தவர்கள் இல்லை. மெய் சொல்லி கெட்டவர்கள் இல்லை. எனவே பொய் சொல்பவர்கள் தக்க பலனை பெறுவார்கள்.
ஒரு மாவட்டத்தை பிரிக்க வேண்டும் என்றால் பல கோடி செலவு மற்றும் மிகப்பெரிய பணி இதன் பின்னே உள்ளது. இந்நிலையில் அதிமுக அரசு வரலாற்று சிறப்புமிக்க நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளது.
கிருஷ்னா நதிநீர் தமிழக நீர்தேக்கங்களை நிச்சயம் வந்தடையும். மேலும் தண்ணீர் பிரச்சினை இல்லாத நிலையை உருவாக்க அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.இலங்கை தமிழர் விவகாரத்தில் திமுக பச்சோந்தி போன்று இரட்டை வேடம் போட்டுள்ளது.7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநரை நாம் கட்டாயப்படுத்த முடியாது என்று தெரிவித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பெயிண்டராக இருந்து நடிகராக உயர்ந்ததை நினைவுக்கூர்ந்து நடிகர் சூரி பதிவு!
February 11, 2025![actor Soori](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/actor-Soori-.webp)
க்ரிப்டோ கரன்சி விளம்பரம் செய்த த்ரிஷா? அதிர்ச்சியின் அடுத்த நொடியே இன்ஸ்டாவில் அந்த பதிவு.!
February 11, 2025![Trisha x hacked](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Trisha-x-hacked.webp)
தவெகவில் எத்தனை அணிகள்? குழந்தைகள் அணி உள்பட முழு பட்டியல் வெளியீடு!
February 11, 2025![tvk vijay](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/tvk-vijay-1.webp)