பெண்களின் திருமண வயதை உயர்த்துவது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று பிரதமர் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
ஐ.நா.வின் உணவு மற்றும் விவசாய கூட்டமைப்பு தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவு விழாவில்,ரூ.75 நாணயத்தை பிரதமா் மோடி வெளியிட்டாா். அந்த நிகழ்ச்சியில் அவா் பேசுகையில், நாட்டில் பெண்களின் திருமண வயதை நிா்ணயிப்பது தொடா்பாக பல விதமான விவாதங்கள் நடைபெற்று வருகிறது.இது தொடர்பாக ஆராய சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.இந்தக் குழுவின் அறிக்கையின் நிலை என்ன என்று விளக்கம் கேட்டு, நாட்டின் பல பகுதிகளில் இருந்து பெண்கள் கடிதம் எழுதியுள்ளனர்.இந்தக் குழு அறிக்கையைத் தாக்கல் செய்த பின்னர் பெண்களின் திருமண வயது தொடா்பாக அரசு விரைவில் முடிவு எடுக்கும் என்று தெரிவித்தார்.
இந்நிலையில் இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், பெண்களின் திருமண வயதை உயர்த்துவது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று பிரதமர் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. இதைத் தான் பாட்டாளி மக்கள் கட்சி நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறது.பெண்கள் உயர்கல்வி பெறவும், வாழ்க்கையில் சாதிக்கவும் இது அவசியமாகும் என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி அளித்த பாலியல் புகார் பெரும்…
சென்னை : இன்று மக்கள் நீதி மய்ய கட்சியின் 2வது பொதுக்கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 21] எபிசோடில் முத்துவும் மீனாவும் விபத்திலிருந்து தப்பினர். சிட்டியை வெறுக்கும் சத்யா ;…
இலங்கை : அண்டை நாடான இலங்கையில் இன்று காலையில் அதிபருக்கான தேர்தல் தொடங்கியது. இந்தத் தேர்தலில், தற்போதைய அதிபரான ரணில்…
சென்னை : 'வேட்டையன்' படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில், படத்தின் ஹிட் பாடலான…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (டிவிட்டர்) வலைதள பக்கத்தின் முகப்பு புகைப்படம் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…