அணை பாதுகாப்பு மசோதாவை பிரதமர் தொலைநோக்குப் பார்வையில் கொண்டு வந்துள்ளார்-ரவீந்திரநாத் குமார்

Default Image

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணி எதிர்பார்த்த வெற்றியடைவில்லை.ஆனால் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் மகன் போட்டியிட்ட தேனி தொகுதியில் மட்டும் தான் வெற்றிபெற்றது அதிமுக.

இதனையடுத்து அதிமுக சார்பில் மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட துணை முதலமைச்சர் மகன் ரவீந்திரநாத் குமார் அதிமுக சார்பாக பல கோரிக்கைகளை முன் எடுத்து வருகிறார். நேற்று மக்களவையில் அதிமுக எம்.பி. ரவீந்திரநாத் பேசினார்.அப்பொழுது அவர் பேசுகையில்,  அணை பாதுகாப்பு மசோதாவை பிரதமர் தொலைநோக்குப் பார்வையில் கொண்டு வந்துள்ளார். தமிழக உரிமை மற்றும் அதன் செயல்பாடுகள் பாதிக்காத வகையில் அணை பாதுகாப்பு மசோதா அமைய வேண்டும் என்று பேசினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்