வீட்டு உபயோக சமையல் எரிவாயு உருளையின் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஆனால், வணிக பயன்பாட்டு உருளைகளின் விலை ரூ.78 உயர்த்தப்பட்டது.
பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், சமையல் எரிவாயு உருளை விலையை மாதந்தோறும் முதல் தேதி மாற்றி அமைத்து வருகின்றன. அந்த வகையில், நவம்பர் மாதத்துக்கான 14.2 கிலோ எடையுள்ள வீட்டு உபயோக மானிய விலை சமையல் எரிவாயு விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. எனவே, சென்னையில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை நவம்பர் மாதத்துக்கும் ரூ.610 ஆகவே நீடிக்கிறது. இதேபோல், டெல்லி, மும்பையில் ரூ.594 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.620.50 ஆகவும் நீடிக்கிறது. ஆனால், கடைகள் உள்ளிட்ட வர்த்தக நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் 19 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு விலை, சிலிண்டருக்கு ரூ.78 உயர்த்தப்பட்டுள்ளது. இதன் சென்னை விலை ரூ.1,354 ஆகவும், டெல்லியில் ரூ.1,241.50 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.1,296 ஆகவும், மும்பையில் ரூ.1,189.50 ஆகவும் அதிகரித்துள்ளது. இந்த விலையேற்றத்தின் தாக்கம் நுகர்வோரையும் பாதிக்கும் என பொதுமக்கள் கருதுகின்றனர்.
துபாய் : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி வரும் மார்ச் 22-ஆம் தேதி பிரமாண்டமாக தொடங்கப்படவுள்ளது. முதல் போட்டியானது நடப்பு சாம்பியன்…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் (தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர்)…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள்…
சென்னை : விஜயின் தமிழக வெற்றிக் கழக கட்சியின் பொதுக்குழு கூட்டமானது வரும் மார்ச் 28ஆம் தேதியன்று (அடுத்த வார…
சென்னை : நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளராக வீரப்பன் மகள் வித்யாராணி நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியின் தலைமை…
சென்னை : தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 4 கொலைகள் நடந்துள்ளதாக இன்றைய சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி…