ரஷ்ய நாட்டை சேர்ந்த பெண்ணை கத்தியை காட்டி மிரட்டி அத்துமீறலில் ஈடுபட்ட சாமியாரை தன்னுடைய கராத்தே கலையை பயன்படுத்தி சாமியாரை போலீசில் ஒப்படைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து ரஷ்ய நாட்டை சேர்ந்த பெண் ஆஷா சார்லெட் என்பவர் திருவண்ணாமலையில் கிரிவலப் பாதையில் உள்ள ருத்ராட்ச இல்லத்தில் வசித்து வருகிறார். இவரை கடந்த சில நாட்களாக மணிகண்டன் என்ற சாமியார் பின்தொடர்ந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஆஷா வீட்டில் தனியாக இருந்த நிலையில், அதனை தெரிந்து கொண்ட அந்த சாமியார் ஆஷாவின் வீட்டில் அத்துமீறி நுழைந்து கத்தியை காட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது.
அப்போது ஆஷா தான் கற்றிருந்த கராத்தே கலையை பயன்படுத்தி சாமியாரின் கையிலிருந்த கத்தியை பிடுங்கி விட்டு, அக்கம்பக்கத்தினரை கூச்சலிட்டு அழைத்துள்ளார். அதனையடுத்து அருகிலுள்ளவர்களின் உதவியுடன் சாமியாரை போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை : சென்னை வானிலை ஆய்வு மையம் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், வெப்ப நிலை உயரும் எனவும் எச்சரிக்கை கொடுத்து தகவலை…
சென்னை : 90 ஸ் காலகட்டத்தில் கொடி கட்டி பறந்த நடிகை சிம்ரன் இப்போது ஹீரோயினாக இல்லாமல் நல்ல கதையம்சம் கொண்ட…
சென்னை : (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ விலகுவதாக நேற்று அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்திருந்தார். அவர்…
சென்னை : தமிழ்நாடு சட்டசபை தேர்தல் அடுத்தாண்டு நடைபெறவுள்ள நிலையில் எந்த கட்சி எந்தெந்த கட்சிகளோடு கூட்டணி வைக்கபோகிறது என்பதற்கான கேள்விகளும்…
மும்பை : ஐபிஎல் போட்டிகள் என்றாலே சென்னை மற்றும் மும்பை போட்டி நடைபெறுகிறது என்று சொன்னாலே போதும் அதற்கென்று தனி ரசிகர்கள்…
கேரளா : மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள பொன்னானி பகுதியில், புதிய பாலத்தின் மேல் நின்று ஒரு இளைஞர் ஆத்மஹத்யா செய்து…