தமிழகத்தில் 10, 11, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே மாதம் பொதுத்தேர்வு நடைபெற உள்ளதால் இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.அந்த வகையில்,10, 11 & 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு கண்காணிப்பு பணிகளுக்கு 38 மாவட்டங்களுக்கும் தனித்தனி அதிகாரிகளை நியமித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்திருந்தது.
இதையடுத்து,10, 11 & 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் ஹால்டிக்கெட்டுகளும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் சமீபத்தில் வெளியிட்டது.மேலும்,தமிழகத்தில் 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத்தேர்வுக்கு நேரம் குறைக்கப்பட்டுள்ளது.
அதன்படி,செய்முறைத்தேர்வுக்கான நேரத்தை 3 மணி நேரத்தில் இருந்து 2 மணி நேரமாக குறைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டிருந்தார்.இதனால் 50 மதிப்பெண்களுக்கு நடத்தப்பட்ட செய்முறைத் தேர்வானது,இனி 11 & 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 30 மதிப்பெண்களுக்கு மட்டுமே நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில்,10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான (பொதுப்பிரிவு மற்றும் தொழிற்கல்விப் பாடப்பிரிவி) செய்முறைத்தேர்வுகள் இன்று (ஏப்ரல் 25-ஆம் தேதி) முதல் மே 2-ஆம் தேதி வரையில் நடைபெற உள்ளன.
செய்முறைத் தேர்வை 10 லட்சதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதுகின்றனர்.குறிப்பாக,சென்னையில் மட்டும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் செய்முறைத் தேர்வு எழுதுகின்றனர்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…