குடியுரிமை தரும் அதிகாரம் மத்திய அரசிடம்தான் உள்ளது – துரைமுருகன் 

Default Image

குடியுரிமை தரும் அதிகாரம் மத்திய அரசிடம்தான் உள்ளது என்று  துரைமுருகன்  தெரிவித்துள்ளார். 

நேற்று நடைபெற்ற தமிழக சட்டப்பேரவையில் , அமைச்சர் பாண்டியராஜன் பேசுகையில்,  இலங்கை தமிழர்களுக்கான இரட்டை குடியுரிமை வழங்குவதில் எந்த தவறும் இல்லை என்றும் தெரிவித்தார். அதிமுகவின் நிலைப்பாடு சரிதான் என்று தெரிவித்தார்.ஜெயலலிதா பல ஆண்டுகால இந்த கோரிக்கையை வலியுறுத்தி வருவதாக தெரிவித்தார்.

இதன் பின் பாண்டியராஜன் பேச்சில் எந்த மீறலும் என்று  சபாநாயகர் தனபால் தெரிவித்தார். ஆனால் சபாநாயகரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து , தமிழக சட்டப்பேரவையில் இருந்து திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இதன் பின்னர் செய்தியாளர்களுக்கு துரைமுருகன் பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், குடியுரிமை தரும் அதிகாரம் மத்திய அரசிடம்தான் உள்ளது.மத்திய அமைச்சரால் முடியாது என்று சொன்ன விஷயத்தை  அமைச்சர்  பாண்டியராஜன் முடியும் என்று கூறுகிறார். மத்திய அரசு கொடுக்க முடியாததை இவர்கொடுக்க  முடியும், இதை சபாநாயர் தனபாலிடம் கூறினால் அவர் ஏற்றுக்கொள்ளவில்லை என்று தெரிவித்தார். 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்