செவிலியர்களை சமூக விரோதிகளைப் போல காவல் துறையினர் கையாண்ட விதம் கடும் கண்டனத்திற்குரியது – டிடிவி தினகரன்

Published by
லீனா

பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து சென்னை ஓமந்தூரார் மருத்துவமனை வளாகத்தில் போராடிய செவிலியர்களை சமூக விரோதிகளைப் போல காவல் துறையினர் கையாண்ட விதம் கடும் கண்டனத்திற்குரியது என டிடிவி தினகரன் ட்வீட்.

பணி நிரந்திர உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அரசு மருத்துவமனை செவிலியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை வளாகத்தில் 100க்கும் மேற்பட்ட செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தகவலறிந்து வந்த காவல்துறை போராட்டம் நடத்தும் செவிலியர்களுடன் பேசுவார்த்தையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

ஆனால், காவல்துறையுடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டாததாதல், செவிலியர்கள் சாலை மறியில் ஈடுபட்டதாகவும், இதனால் அவர்களை காவல்துறை கைது செய்துள்ளது எனவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், தகுதியுடைய செவிலியர்கள் அனைவரும் பணி நிரந்தரம் செய்யப்படும் பணி நடைபெற்று வருகிறது என மருத்துவத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

இந்த நிலையில், இதுகுறித்து டிடிவி தினகரன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து சென்னை ஓமந்தூரார் மருத்துவமனை வளாகத்தில் போராடிய செவிலியர்களை சமூக விரோதிகளைப் போல காவல் துறையினர் கையாண்ட விதம் கடும் கண்டனத்திற்குரியது.

மருத்துவ ரீதியாக நெருக்கடியான நேரங்களில் தங்கள் இன்னுயிரையே துச்சமாக நினைத்து பணியாற்றும் செவிலியர்களின் கோரிக்கைகளுக்கு முன்னுரிமை கொடுத்து உடனடியாக அவர்களுடன் பேச்சு வார்த்தை துவங்க வேண்டும் என தி.மு.க அரசை வலியுறுத்துகிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

4 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

4 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

4 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

4 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

5 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

5 hours ago