செவிலியர்களை சமூக விரோதிகளைப் போல காவல் துறையினர் கையாண்ட விதம் கடும் கண்டனத்திற்குரியது – டிடிவி தினகரன்

Default Image

பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து சென்னை ஓமந்தூரார் மருத்துவமனை வளாகத்தில் போராடிய செவிலியர்களை சமூக விரோதிகளைப் போல காவல் துறையினர் கையாண்ட விதம் கடும் கண்டனத்திற்குரியது என டிடிவி தினகரன் ட்வீட்.

பணி நிரந்திர உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அரசு மருத்துவமனை செவிலியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை வளாகத்தில் 100க்கும் மேற்பட்ட செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தகவலறிந்து வந்த காவல்துறை போராட்டம் நடத்தும் செவிலியர்களுடன் பேசுவார்த்தையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

ஆனால், காவல்துறையுடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டாததாதல், செவிலியர்கள் சாலை மறியில் ஈடுபட்டதாகவும், இதனால் அவர்களை காவல்துறை கைது செய்துள்ளது எனவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், தகுதியுடைய செவிலியர்கள் அனைவரும் பணி நிரந்தரம் செய்யப்படும் பணி நடைபெற்று வருகிறது என மருத்துவத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

இந்த நிலையில், இதுகுறித்து டிடிவி தினகரன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து சென்னை ஓமந்தூரார் மருத்துவமனை வளாகத்தில் போராடிய செவிலியர்களை சமூக விரோதிகளைப் போல காவல் துறையினர் கையாண்ட விதம் கடும் கண்டனத்திற்குரியது.

மருத்துவ ரீதியாக நெருக்கடியான நேரங்களில் தங்கள் இன்னுயிரையே துச்சமாக நினைத்து பணியாற்றும் செவிலியர்களின் கோரிக்கைகளுக்கு முன்னுரிமை கொடுத்து உடனடியாக அவர்களுடன் பேச்சு வார்த்தை துவங்க வேண்டும் என தி.மு.க அரசை வலியுறுத்துகிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்