transfer [Imagesource : Representative]
சென்னை ஆவடி காவல் ஆணையத்திற்குட்பட்ட பகுதிகளில் குட்கா விற்பனை தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பதாக காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் பல பகுதிகளில் உள்ள ஒவ்வொரு கடைகளிலும் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையின் போது, 113 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டதோடு, 23 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும், இவர்களுக்கு அதிகாரிகள் அபராதமும் விதித்து உத்தரவிட்டனர்.
சென்னையில் 28 பேரை கடித்த நாய்க்கு ரேபிஸ் தொற்று உறுதி..!
மேலும், குட்கா விற்பனை செய்பவர்களுடன் தொடர்பில் இருந்ததாக இரண்டு உதவி ஆய்வாளர்கள் மற்றும் 24 காவலர்கள் என மொத்தம் 26 பேரை ஆவடி காவல் ஆணையர் சங்கர் அவர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி உத்தரவிட்டார். காவலர்களே குட்கா விற்பனை செய்பவர்களுக்கு உடந்தையாக இருந்ததால், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில் தற்போது காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த 3 எஸ்.ஐ, 10 காவலர்கள் வெளி மாவட்டங்களுக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஆவடி காவல் ஆணையர் சங்கர் பரிந்துரையின்படி, டிஜிபி சங்கர் ஜிவால் அவர்கள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
சென்னை : தென்னாப்பிரிக்காவின் இளம் அதிரடி வீரரான டிவால்ட் பிரேவிஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்துள்ளார். சென்னை சூப்பர்…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
சென்னை : இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, அசோக் செல்வன், த்ரிஷா, அபிராமி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள "தக்…
சென்னை : தவெக தலைவர் விஜய், கடந்த மார்ச் மாதம் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்ற இப்தார் நோன்பு…
சென்னை : அதிமுக - பாஜக கூட்டணியை மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா அறிவித்தது தான் அறிவித்தார்.…
திருவள்ளூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருவள்ளூர் மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்டு அங்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில்…