தூத்துக்குடி மாவட்டம் அருகே 25 வயது போலீஸ் ஒருவர் தான் காதலிக்கும் பெண் வீட்டில் சம்மதம் தெரிவிக்காதததால் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் அடுத்த புதுக்கோட்டை அருகிலுள்ள கீழ செக்காரக்குடியைச் சேர்ந்தவர் சுப்பையா இவருடைய மகன் ராமச்சந்திரன் வயது 25 இவர் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் ஆயுதப்படை போலீஸ் அதிகாரியாக பணியாற்றி வந்தார் இந்த நிலையில் கடந்த 6ம் தேதி விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தார் , மேலும் விடுமுறை முடிந்த பிறகு பணிக்கு செல்லாமல் இருந்து வந்தார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே ராமச்சந்திரன் சோகமாக இருந்து வந்த நிலையில் நேற்று மாலை அவர் திடீரென வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துவிட்டார், மேலும் இதுகுறித்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர், அப்பொழுது போலீசாருக்கு கிடைத்த தகவல் , ராமச்சந்திரன் அந்த பகுதியில் உள்ள ஒரு இளம்பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த காதல் அந்த பெண்ணின் வீட்டில் தெரிந்து ராமச்சந்திரனுக்கு திருமணம் செய்து கொடுக்க மறுத்துள்ளார்கள். இதில் மனமுடைந்த ராமச்சந்திரன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து இருப்பதாக தெரியவந்துள்ளது, மேலும் தொடர்ந்து போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை :வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து கடந்த செப்-5ம் தேதி மிகுந்த எதிர்பார்ப்புடன் திரையருங்குகளில் வெளியான GOAT திரைப்படம்…
ஹைதராபாத் : முன்னணி நடன இயக்குநர் ஜானி மீது 21 வயது இளம் பெண் ஐதராபாத் போலீசில் பாலியல் பலாத்கார புகார்…
சென்னை : மணிமேகலை மற்றும் பிரியங்கா ஆகியோருக்கு இடையே நடந்த ஆங்கரிங் பிரச்சனை பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில்,…
சென்னை : தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் என்கிற (ஃபெப்சி) அமைப்பின் சார்பில், அதன் தலைவர் ஆர்.கே.செல்வமணி நேற்று நிருபர்களுக்கு…
சென்னை- வீட்டில் இருக்கும் கொஞ்ச பொருட்களை வைத்து சட்டென ஒரு ஸ்நாக்ஸ் ரெடி பண்ணனுமா ?அப்போ இந்த பஞ்சு போன்ற…
சென்னை : ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளராக விலகிய பிறகு தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமைப்…