காதலுக்கு மறுப்பு தெரிவித்ததால் தூக்கு போட்டு தற்கொலை செய்த போலீஸ்.!

Default Image

தூத்துக்குடி மாவட்டம் அருகே 25 வயது போலீஸ் ஒருவர் தான் காதலிக்கும் பெண் வீட்டில் சம்மதம் தெரிவிக்காதததால் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். 

தூத்துக்குடி மாவட்டம் அடுத்த புதுக்கோட்டை அருகிலுள்ள கீழ செக்காரக்குடியைச் சேர்ந்தவர் சுப்பையா இவருடைய மகன் ராமச்சந்திரன் வயது 25 இவர் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் ஆயுதப்படை போலீஸ் அதிகாரியாக பணியாற்றி வந்தார் இந்த நிலையில் கடந்த 6ம் தேதி விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தார் , மேலும் விடுமுறை முடிந்த பிறகு பணிக்கு செல்லாமல் இருந்து வந்தார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே ராமச்சந்திரன் சோகமாக இருந்து வந்த நிலையில் நேற்று மாலை அவர் திடீரென வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துவிட்டார், மேலும் இதுகுறித்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர், அப்பொழுது போலீசாருக்கு கிடைத்த தகவல் , ராமச்சந்திரன் அந்த பகுதியில் உள்ள ஒரு இளம்பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த காதல் அந்த பெண்ணின் வீட்டில் தெரிந்து ராமச்சந்திரனுக்கு திருமணம் செய்து கொடுக்க மறுத்துள்ளார்கள். இதில் மனமுடைந்த ராமச்சந்திரன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து இருப்பதாக தெரியவந்துள்ளது, மேலும் தொடர்ந்து போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்