“பெரியாரின் நெஞ்சில் தைத்த முள் நீக்கப்பட்டது;முதல்வருக்கு பாராட்டுக்கள்” – விசிக தலைவர் தொல்.திருமாவளவன்

Published by
Edison

அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர்களாக நியமனம் செய்யப்பட்டதன் மூலம் பெரியாரின் நெஞ்சில் தைத்த முள் நீக்கப்பட்டது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சென்னை ஆர்.டி.எம். புரத்தில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டத்தின் தொடக்க விழா நேற்று காலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் இந்து சமய அறநிலையத்துறைஅமைச்சர் சேகர்பாபு, அமைச்சர் கே.என். நேரு, குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில்,முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பயிற்சி முடித்த 24 அர்ச்சகர்கள் உட்பட 58 அர்ச்சகர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கினார்.இதற்கு அரசியல் தலைவர்கள் மற்றும் மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில்,அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர்களாக நியமனம் செய்யப்பட்டதன் மூலம் பெரியாரின் நெஞ்சில் தைத்த முள் நீக்கப்பட்டது.திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற நூறாவது நாளில் புரட்சிகர வரலற்றுச் சாதனை.எனவே,தமிழ்நாடு முதலமைச்சருக்கு பாராட்டுக்கள் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

மேலும்,இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பெரியாரின் கனவு:

அர்ச்சகர் பயிற்சி பெற்ற பிராமணரல்லாத பல்வேறு சாதிகளைச் சேர்ந்த 58 பேரை அர்ச்சகர்களாக நியமனம் செய்து அதற்கான ஆணையை நேற்று தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கியிருக்கிறார். அவர்களில் 6 பேர் ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர்கள் ஆக வேண்டும் என்ற பகுத்தறிவு பகலவன் பெரியாரின் கனவு மெய்ப்பட்டு,அவரது நெஞ்சில் தைத்த முள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் களையப் பட்டிருக்கிறது. இந்த வரலாற்றுச் சாதனையைச் செய்த தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களையும், அவருக்கு உறுதுணையாக இருக்கும் இந்து அறநிலையத்துறை அமைச்சர் மாண்புமிகு சேகர்பாபு அவர்களையும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மனதாரப் பாராட்டுகிறோம்.

இந்து அறநிலையத்துறை சட்டம்:

மத்திய அரசால் அமைக்கப்பட்ட எல்.இளையபெருமாள் கமிட்டி 1969 இல் சமர்ப்பித்த தனது அறிக்கையில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக்கப்பட வேண்டும் என்று பரிந்துரை செய்திருந்தது. அதனடிப்படையில் 1970ஆம் ஆண்டு சமத்துவப் பெரியார்,கலைஞர் அவர்கள் தலைமையிலான அரசு, இந்து அறநிலையத்துறை சட்டம் 1959 இல் திருத்தம் கொண்டு வந்தது. அதை எதிர்த்து சில சனாதனவாதிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.

அர்ச்சகர் என்பவர்:

அர்ச்சகர் என்பவர் சமயத் தலைவருக்கு ஒப்பானவர் என்று அங்கு வாதிட்டனர். ஆனால் உச்ச நீதிமன்றம் அதை ஏற்கவில்லை. அவர் அறங்காவலர்களால் நியமிக்கப்படும் ஒரு ஊழியர் மட்டும் தான் என்று அது தீர்ப்பளித்தது. ஆனால் ஆகம விதிகளின்படி அமைக்கப்பட்டுள்ள கோயில்களில் அந்த முறையின்படி தான் அர்ச்சகர் நியமனம் செய்யப்பட வேண்டும் என்றும் அது தெரிவித்தது. அதனால் ஆகம் விதிகளின்படி அமைக்கப்பட்டுள்ள பெரிய கோயில்களில் அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகர்களாக நியமிக்க முடியாத நிலை இருந்தது.

அர்ச்சகர் பயிற்சி நிறுவனம்:

2006 ஆம் ஆண்டு கலைஞர் அவர்கள் மீண்டும் ஆட்சியதிகாரத்தைப் பெற்றபோது அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆவதற்கான சட்டத் திருத்தத்தை மீண்டும் கொண்டுவந்தார். அப்படி நியமனம் செய்வதற்கென அர்ச்சகர் பயிற்சி அளிப்பதற்கென்று 2007 ஆம் ஆண்டு மே மாதம் தமிழகத்தின் 6 பகுதிகளில் அர்ச்சகர் பயிற்சி நிறுவனங்களைத் தமிழக அரசு நிறுவியது.

2006 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட திருத்தச் சட்டத்தை எதிர்த்து சனாதனிகள் உச்சநீதிமன்றத்துக்குச் சென்றார்கள். அதனால் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியில் பயிற்சியெடுத்த 206 பேரை திருக்கோயில்களில் அர்ச்சகர்களாக நியமிக்க முடியாத நிலை உண்டானது.

உச்ச நீதிமன்றம் தீர்ப்பு:

இதனிடையே 2015ஆம் ஆண்டு அந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கியது. ஆகம விதிகளுக்கு உட்பட்ட கோயில்களில் அந்த முறைப்படி தான் அர்ச்சகர் நியமிக்கப்பட வேண்டும் என்று உறுதிசெய்தது. ஆனால் அந்த நியமனம் அரசியலமைப்புச் சட்டத்தின் உறுப்பு 14 இல் உறுதி அளிக்கப்பட்டுள்ள சமத்துவம் என்ற கோட்பாட்டுக்கு முரணானதாக இருக்கக்கூடாது. அந்த நியமனம் பிறப்பின் அடிப்படையில் எவரையும் பாகு படுத்துவதாக அமையக் கூடாது’ என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பில் தெளிவுபடுத்தியது.

அதிமுக அரசு ஆர்வம் காட்டவில்லை:

இதனால் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக நியமிப்பதற்கு அதுவரை இருந்துவந்த தடை முழுமையாக நீங்கியது. ஆனால் அனைத்து சாதியினரையும் அர்ச்சகர் ஆக்குவதற்கு அப்போதிருந்த அதிமுக அரசு ஆர்வம் காட்டவில்லை. இப்போது மீண்டும் திமுக ஆட்சி அதிகாரத்துக்கு வந்துள்ள நிலையில் அதன் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் இலட்சியத் திட்டத்தை நிறைவேற்றும் விதமாக அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகர்களாக நியமித்து சாதனை படைத்துள்ளார். ஆட்சிப் பொறுப்பேற்று 100 ஆவது நாளில் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

அர்ச்சகர் நியமனத்தில் சமத்துவம்:

2015ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் அரசியலமைப்புச் சட்ட உறுப்பு-14 ஐக் குறிப்பிட்டு ‘அர்ச்சகர் நியமனத்தில் சமத்துவம் பேணப்படவேண்டும்’ என்று தெளிவுபடுத்தி இருப்பதால், ஆகம விதிகளுக்கு உட்பட்ட கோயில்களில் ஒரு குறிப்பிட்ட சாதியினரை மட்டுமே அர்ச்சகர்களாக நியமித்தால் அது நீதிமன்றத்தை அவமதித்ததாகிவிடும். எனவே ஆகமக் கோயில்களிலும் அனைத்து சாதியினரையும் அர்ச்சகர்களாக நியமிக்கத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். அர்ச்சகர் பயிற்சிப் பெற்ற மற்றவர்களையும் அர்ச்சகர்களாக நியமிக்கவேண்டுமெனவும் வலியுறுத்துகிறோம்”,என்று தெரிவித்துள்ளார்.

Published by
Edison

Recent Posts

போரில் வெற்றி பெற்றாரா ஹிப்ஹாப் ஆதி? “கடைசி உலகப் போர்” டிவிட்டர் விமர்சனம் இதோ!

போரில் வெற்றி பெற்றாரா ஹிப்ஹாப் ஆதி? “கடைசி உலகப் போர்” டிவிட்டர் விமர்சனம் இதோ!

சென்னை : இசையமைப்பாளராக நம்மளுடைய மனதை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய முதல் படமான மீசையை முறுக்கு படத்தின்…

11 mins ago

துணை முதல்வர் கேள்வி., “அரசியல் வேண்டாம்” ஒதுங்கிய ரஜினிகாந்த்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்ற பேச்சுக்கள் தற்போது தமிழக…

20 mins ago

திருப்பதி லட்டு விவகாரம் : “இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா?” இயக்குநர் மோகன்ஜி காட்டம்!

சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…

2 hours ago

இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை.. சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?

சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…

2 hours ago

“சுயமரியாதை முக்கியம்…கடவுளுக்கு மட்டும் தலைவணங்குங்கள்”…மணிமேகலை அட்வைஸ்!

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…

3 hours ago

இன்னும் 10 நாளில் உதயநிதி துணை முதல்வர்.! அமைச்சர் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…

3 hours ago