கரூர் மாவட்டம் மாயனூர் அருகே வசித்து வரும் ராஜபாண்டியன் எனபவர் தனது கடனை அடைக்க யுடியூப் பார்த்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதையடுத்து, போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.
இன்று குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை யூடியூப் சேனலை பல்வேறு தேவைகளுக்காக பல வீடியோக்களை பார்ப்பதுண்டு. அந்த வகையில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த ராஜபாண்டியன் என்பவர் தனக்கு கடன் அதிகமானதால் யுடியூப் பார்த்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் கடைவீதியில் உள்ள நகை கடையின் பக்கவாட்டுச் சுவரில் ராஜபாண்டியன் கடையில் இருக்கும் நகைகளை திருடுவதற்காக கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அப்போது அப்பகுதி மக்கள் இதனை கண்ட உடன் காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.
இதனையடுத்து, ராஜபாண்டியன் அந்த இடத்தை விட்டு சென்றார். அவர் மாயமான நிலையில் தடவியல் சோதனையை மேற்கொண்டு காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தினர். இதனையடுத்து சிசிடிவி காட்சிகளை கொண்டு ஆராய்ந்ததில் அவர் கரூர் மாவட்டம் மாயனூர் அருகே வசித்து வரும் ராஜபாண்டியன் என்பது தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து, காவல்துறையினர் உடனடியாக அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் தனக்கு 2 லட்சம் ரூபாய்க்கு மேல் கடன் ஏற்பட்டதால் அதனை அடைக்க யுடியூப் சேனல் பார்த்து நகை கடை சுவரில் துளையிட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் பொதுமக்கள் தன்னை பார்த்ததால் அங்கிருந்து தப்பி ஓடியதாகவும் கூறியுள்ளார்.
துபாய் : 2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது.…
சென்னை : இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 4 திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று உலகம் முழுவதும்…
துபாய் : இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில், வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய்…
சென்னை : தனுஷின் 'துள்ளுவதோ இளமை', தாஸ், என்றென்றும் புன்னகை போன்ற பல படங்களிலும், பல முன்னணி விளம்பரங்களிலும் நடித்துள்ள…
சென்னை : காலையில் குறைந்த தங்கத்தின் விலை மதியம் உயர்ந்துள்ளது. காலையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்த நிலையில் 3…
சென்னை : மும்மொழி கொள்கை விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ள நிலையில், மூன்றாவது மொழி ஏதேனும் என குறிப்பிட்டு மத்திய…