பெரியார் வேடமிட்டு நடித்த குழந்தையை தூக்கில் தொங்க விட வேண்டும் என பதிவிட்ட நபர் கைது.
பிரபல தனியார் தொலைக்காட்சியான ஜீ தமிழ் தொலைக்காட்சியில் குழந்தைகள் பங்கேற்கும் ஜூனியர் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சியில் தந்தை பெரியாரின் கருத்துக்களை அவரை போன்றே வேடமிட்டு ஒரு குழந்தை நடித்து காட்டியுள்ளது. அந்த நிகழ்ச்சியில் குழந்தைகள் மூலம் வெளிவந்த பெரியாரின் கருத்துக்கள் அனைத்தும் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் இதற்கு லட்சக்கணக்கானோர் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.
மேலும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை தலைமை செயலகத்தில் குழந்தைகளை அழைத்து பாராட்டுகளை தெரிவித்து இருந்தார். இந்தநிலையில் கோவில்பட்டி அருகேயுள்ள கயத்தாரை சேர்ந்த வெங்கடேஷ் குமார் பாபு என்பவர் சமூகவலைதளத்தில் பொதுமக்களின் அமைதியை குலைக்கும் வகையில் நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்த குழந்தைகளுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் கருத்து பதிவிட்டுள்ளார்.
அவர் பதிவிட்டுள்ள பதிவில், தந்தை பெரியார் போல வேடமிட்டு நடித்த குழந்தையை அடித்துக் கொன்று பொது இடத்தில் தூக்கில் தொங்கவிட வேண்டும் என பதிவிட்டு இருந்தார். இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில், திமுக நகர செயலாளர் சுரேஷ் கண்ணன் என்பவர் கயத்தார் போலீசாரிடம் இதுகுறித்து புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் வெங்கடேஷ் குமார் பாபுவை போலீசார் கைது செய்து உள்ளனர். மேலும் அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.66,000-ஐ கடந்தது நகை…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 – 2026 (பட்ஜெட் 2025)-ஐ…
சென்னை : ஜோ படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ரியோ நடிக்கும் படங்களின் மீது எதிர்பார்ப்புகள் எழுந்த சூழலில் அவர்…
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026 ஆம்…
சென்னை : பலரும் பார்த்து ரசித்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றிபெற்ற நிலையில், அடுத்ததாக கிரிக்கெட் ரசிகர்களுடைய…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 - 2026 (பட்ஜெட் 2025)-ஐ…