பள்ளி வளாகத்தில் ஆசிரியரை வெட்டி கொலை செய்த நபர் தற்கொலை!!தூக்கிட்ட நிலையில் உடல் கண்டெடுப்பு!!

Default Image
  • கடலூரில் தனியார் பள்ளி வளாகத்தில் ஆசிரியரை வாலிபர் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
  •  ஆசிரியை கொலை வழக்கில் தேடப்பட்ட இளைஞர் ராஜசேகர் தற்கொலை செய்துள்ளார். 

கடலூர் மாவட்டத்தில் உள்ள குறிஞ்சிப்பாடியில் உள்ள தனியார் பள்ளியில் வளாகத்தில் நேற்று முன்தினம் (பிப்ரவரி 22 ஆம் தேதி) காலை ஆசிரியரை வாலிபர் வெட்டிக்கொன்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.வெட்டி துடிதுடித்த ஆசிரியரை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லும் போது ஆசிரியர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Image result for பள்ளி வளாகத்தில் ஆசிரியர் வெட்டி கொலை

மேலும் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் விசாரணை நடத்தியது.போலீசின் முதல கட்ட விசாரணையில் ஒருதலை காதல் காரணமாக ஆசிரியரை வாலிபர் வெட்டியது தெரிய வந்தது.மேலும் போலீசார் அருகில் உள்ள CCTV கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். கொலையாளியை பிடிக்க தீவிர விசாரணை நடத்தியது.இதில்  ஆசிரியை கொலை வழக்கில் ராஜசேகர் என்ற இளைஞரை போலீஸ் தேடி வந்தது.

இந்நிலையில் ஆசிரியை கொலை வழக்கில் தேடப்பட்ட இளைஞர் ராஜசேகர் தற்கொலை செய்துள்ளார். திருநாவலூர் அருகே காட்டுப்பகுதியில் தூக்கிட்ட நிலையில் ராஜசேகரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்