மதுபோதையில் அடுத்தவர் வீட்டிற்குள் நுழைந்த அதிமுக முன்னாள் எம்.பி-யை தாக்கிய நபர் கைது.
நீலகிரி அருகே அதிமுக முன்னாள் எம்.பி-யான கோபாலகிருஷ்ணன் அவர்கள் தீபாவளி தினத்தன்று இரவு 10 மணியளவில் மதுபோதையில் முத்தாலம்மன் பேட்டை குடியிருப்பு பகுதியில் உள்ள கோபி என்பவரது வீட்டுக்குள் திடீரென்று புகுந்துள்ளார்.
கோபமடைந்த அவர் கோபாலகிருஷ்ணனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பெண்கள் உள்ள இடத்தில் நிர்வாணமாக வந்தது குறித்து கோபால கிருஷ்ணனிடம் பேசினார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபாலகிருஷ்ணனை கோபி தாக்கியுள்ளார்.
இதனையடுத்து அவர் குன்னூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இருதரப்பிலும் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், முன்னாள் எம்.பி-யை தாக்கியது தொடர்பாக போலீசார் கோபியை கைது செய்துள்ளனர்.
ஷார்ஜா : இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி…
ஜோகன்னஸ்பேர்க் : ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளரும், தற்போதைய மும்பை கேப் டவுன் அணியின் கேப்டனுமான ரஷீத் கான், நெட்ஃபிளிக்ஸில் ஒளிபரப்பப்படும்…
மதுரை : கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தல், ஈரோடு கிழக்கு மற்றும் உ.பியில் மில்கிபூர்…
ஈரோடு : கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர்…
டெல்லி : 70 சட்டப்பேரவைகள் கொண்ட டெல்லி மாநிலத்திற்க்கு கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் வாக்குப்பதிவு…
சென்னை : கடந்த சில நாட்களாக தொடர் உச்சம் கண்டு வந்த தங்கத்தின் விலை நேற்று எந்தவித மாற்றமும் இன்றி…