கடலூர்: இயக்குனர் துரை செந்தில் குமார் இயக்கத்தில் சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன் ஆகியோர் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மே 31-ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘கருடன்’.
இந்நிலையில், கடலூரில் கருடன் படம் பார்க்க வந்த 20க்கும் மேற்பட்ட நாடோடி பழங்குடி மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடலூர் மாவட்டம் அண்ணா பாலம் அருகே உள்ள ‘நியூ சினிமா’ திரையரங்க நிர்வாகம் டிக்கெட் வழங்க மறுப்பு தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, அந்த நாடோடி பழங்குடி மக்கள் கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில், உடையை காரணம் காட்டி தியேட்டருக்குள் அனுமதி மறுக்கப்பட்டதாக புகார் அளித்தனர். பின்னர், காவல்துறையினரின் அறிவுறுத்தலின் பேரில் கோட்டாட்சியரிடம் மனு கொடுத்தனர்.
அந்த மனுவை பெற்று கொண்ட கோட்டாட்சியர், தனது காரிலலேயே அவர்களை ஏற்றி சென்று திரையரங்கிற்கு அழைத்து வந்தார். அங்கு வட்டாட்சியர் நடவடிக்கையை அடுத்து நாடோடி பழங்குடி மக்கள் டிக்கெட் பெற்று கருடன் படம் பார்த்தனர்.
சென்னை : நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் குற்றசாட்டை முன்வைத்து புகார் அளித்து…
சென்னை : நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கி வருகின்ற 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளதாக…
அமெரிக்கா : ரஷ்யா -உக்ரைன் போர் என்பது இன்னும் முடிவுக்கு வராத ஒரு போராக இருந்து வருகிறது. இதன் காரணமாக…
சென்னை : இன்று சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதி போட்டி துபாயில் நடைபெறுகிறது. இதில் ரோஹித் சர்மா…
துபாய் : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் அரையிறுதி இன்று துபாய் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. முதல்…
நாகை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று நாகப்பட்டினத்திற்கு பயணம் மேற்கொண்டிருந்தார். இப்பயணத்தில் நாகை மாவட்டத்தில் முடிவுற்ற திட்டங்கள் தொடங்கி…