விடுதலைப் போராட்ட தியாகிகளுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத் தொகை ரூ.18 ஆயிரமாக உயர்த்தப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இன்று இந்தியாவின் 75-வது சுதந்திர தினவிழா மிகவும் சிறப்பாக, கொரோனா விதிமுறைகளை கடைபிடித்து கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், திறந்த ஜீப்பில் நின்றவாறு காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
தமிழக முதலமைச்சராக பதவியேற்ற பின், 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, முதல்முறையாக சென்னை கோட்டையில் தேசிய கோடியை ஏற்றினார்.அதன்பின் மக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றினார்.அப்போது பேசிய முதல்வர்,
“விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்டு நமது நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட விடுதலைப் போராட்ட வீரர்களுக்கும் அவர்களின் குடும்பத்திற்கும் உதவிகள் வழங்குவதில் தமிழக அரசு எப்போதும் முன்னுரிமை அளித்து வருகிறது.
அந்த வகையில்,மாநில அரசால் விடுதலைப் போராட்ட தியாகிகளுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத் தொகை ரூ.17 ஆயிரத்திலிருந்து ரூ.18 ஆயிரமாக உயர்த்தப்படும்.குடும்ப ஓய்வூதியத் தொகை ரூ.8,500 லிருந்து ரூ.9 ஆயிரமாக உயர்த்தப்படும்” என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…