வீட்டை காலி செய்யுமாறு கூறியதால், இரு குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து தற்கொலை செய்து கொண்ட தாய்.
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே அதப்படக்கியை சேர்ந்தவர் பாலமுருகன். மலேசியாவில் சமையல் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், இவரது மனைவி காளீஸ்வரி (35), மகள் மங்கையர்திலகம் (12), மகன் அபிஷேக் (8) மூவரும், சிவகங்கை மாட்டம்,குறிஞ்சி நகர் பகுதியில் கார்த்திக்கேயன் வீட்டில், ஒத்திக்கு குடியிருந்துள்ளார்.
வீட்டை காலி செய்யுமாறு உரிமையாளர் தரப்பில் நெருக்கடி கொடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, மனமுடைந்த காளீஸ்வரி அவரது குழந்தைகள் இருவருக்கும் விஷம் கொடுத்து, தானும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். காளீஸ்வரி தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பதாக, அந்த வீட்டின் சுவற்றில், என் மரணத்திற்கு காரணம் கார்த்திக்கேயன், நாகஜோதி மற்றும் சுந்தரி என எழுதி வைத்துள்ளார்.
வீட்டின் உரிமையாளர் கார்த்திக்கேயன் தப்பியோடிய நிலையில், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெங்களூர் : இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளானது மழையின் காரணமாக நடைபெறாமல்…
சென்னை : கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கனமழை பெய்து வந்த நிலையில் தற்போது அடுத்ததாக வரும் அக்-20 ம்…
ஜெருசலேம் : காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேல் ராணுவத்திற்கும் இடையே கடந்த ஒரு வருட காலமாக போர்…
சென்னை : வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று கரையைக் கடந்தது. இதனால், தமிழகம் மற்றும்…
துபாய் : நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பை தொடரில் முதல் அரை இறுதிப் போட்டியானது இன்று நடைபெற்றது. இந்தப்…
சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று…