வீட்டை காலி செய்யுமாறு கூறிய வீட்டின் உரிமையாளர்! இரு குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து தற்கொலை செய்து கொண்ட தாய்!

Default Image

வீட்டை காலி செய்யுமாறு கூறியதால், இரு குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து தற்கொலை செய்து கொண்ட தாய்.

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே அதப்படக்கியை சேர்ந்தவர் பாலமுருகன். மலேசியாவில் சமையல் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், இவரது மனைவி காளீஸ்வரி (35), மகள் மங்கையர்திலகம் (12), மகன் அபிஷேக் (8) மூவரும், சிவகங்கை  மாட்டம்,குறிஞ்சி நகர் பகுதியில் கார்த்திக்கேயன் வீட்டில், ஒத்திக்கு குடியிருந்துள்ளார்.

வீட்டை காலி செய்யுமாறு உரிமையாளர் தரப்பில் நெருக்கடி கொடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, மனமுடைந்த காளீஸ்வரி அவரது குழந்தைகள் இருவருக்கும் விஷம் கொடுத்து, தானும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். காளீஸ்வரி தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பதாக, அந்த வீட்டின் சுவற்றில், என் மரணத்திற்கு காரணம் கார்த்திக்கேயன், நாகஜோதி மற்றும் சுந்தரி என எழுதி வைத்துள்ளார்.

வீட்டின் உரிமையாளர் கார்த்திக்கேயன் தப்பியோடிய நிலையில், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்