ஒரே நாடு,ஒரே ரேஷன் திட்டம் !மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும்-மு.க.ஸ்டாலின்

Default Image

ஒரே நாடு,ஒரே ரேஷன் திட்டத்தை ஒரே ஆண்டுக்குள் செயல்படுத்த வேண்டும் என்று மாநில அரசுக்கு மத்திய அரசு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
இந்நிலையில்  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில், ஒரே நாடு ஒரே ரேசன் அட்டை, அகில இந்திய நீதித்துறைத் தேர்வு போன்ற அறிவிப்புகளை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும் . இது போன்ற திட்டங்கள் கூட்டாட்சிக்கும், அரசியல் சட்டத்திற்கும் விரோதமானது.ஒரே நாடு ஒரே ரேசன் அட்டை திட்டத்தை தமிழக அரசு ஆரம்ப நிலையிலேயே எதிர்த்து, அடியோடு கைவிட மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்று அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்