ஓரினச்சேர்க்கைக்கு மறுத்த முதியவர்! கழுத்து நெரித்து கொலை செய்த இளைஞர்!

Published by
லீனா

ஓரினச்சேர்க்கைக்கு இணங்க மறுத்த முதியவர் பொன்ராமை, அருண்குமார் என்ற இளைஞர்  முதியவரின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கெங்குவார்பட்டி கிராமத்தை சேர்ந்த முதியவர் பொன்ராம். இவருக்கு வயது 70. இரண்டு நாட்களுக்கு முன்பு இவர் வீட்டில் இறந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளார். அவரது ஆடை கலைந்து இருந்ததால் சந்தேகமடைந்த அவரது மகள் மாரியம்மாள், தனது தந்தையின் மரணத்தில் மர்மம் இருப்பதாக தேவதானப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் முதியவரின் உடல் தேனி அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டது. அதில் முதியவர் கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. அதன் அடிப்படையில் முதியவரின் வீட்டிற்கு வந்து சென்றவர்கள் பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி அருண் குமார் என்பவர் சிக்கினார்.

அவரிடம் விசாரணை மேற்கொண்டபோது தான்தான் முதியவரை கொலை செய்ய ஒப்புக் கொண்டதாக தெரிவித்துள்ளார். அருண்குமாரும் அவரது நண்பர் ஒருவரும் தன்பாலின ஈர்ப்பு உள்ளவர்களாக இருந்துள்ளனர். அவர்கள் முதியவரின் வீட்டருகில் அடிக்கடி தனிமையில் இருப்பது வழக்கம். இந்நிலையில் நண்பருக்கு திருமணம் ஆனதால் அருண்குமார் இரண்டு நாட்களுக்கு முன்பு, இரவில் மது போதையில் முதியவர் வீட்டுப்பக்கம் சென்றுள்ளார். முதியவரிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். இதனையடுத்து முதியவர் கத்தியதால் பயத்தில் அவரது கழுத்தை பிடித்து நெரித்து கொலை செய்துள்ளார் அருண்குமார் என விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் மீது கொலை வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Published by
லீனா

Recent Posts

லட்டு விவகாரம் : தேவஸ்தானம் அறிக்கை தாக்கல் செய்ய ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு உத்தரவு!

லட்டு விவகாரம் : தேவஸ்தானம் அறிக்கை தாக்கல் செய்ய ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு உத்தரவு!

திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…

10 mins ago

“பிரியங்கா அக்கா அந்த மாதிரி ஆள் கிடையாது”…ஆதரவாக குரல் கொடுத்த அமீர்!

சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…

31 mins ago

துலிப் டிராபி : வெகு நாட்களுக்கு பிறகு சதமடித்த சஞ்சு சாம்சன்! டெஸ்ட் போட்டி கனவு பலிக்குமா?

அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…

34 mins ago

சிறகடிக்க ஆசை சீரியல்.. மீனாவுக்கு கெட்ட நேரமா?. ரோகிணி போடும் அடுத்த குண்டு..!

சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து  மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…

1 hour ago

“திருப்பதியில் ‘மகா பாவம்’ செய்துவிட்டனர்” குமுறும் முன்னாள் தலைமை அர்ச்சகர்.!

திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…

1 hour ago

ENGvsAUS : ‘டிராவிஸ் ஹெட்’ ருத்ரதாண்டவம்! 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி!

நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…

2 hours ago