விபத்தில் சிக்கி இதயத்துடிப்பு நின்ற இளைஞருக்கு முதலுதவி செய்து காப்பாற்றிய செவிலியர் வனஜாவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்த கோட்டூர் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் தான் வனஜா. இவர் மன்னார்குடி அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று அவர் மதுக்கூர் அருகே உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு குடும்பத்தினருடன் காரில் வீடு திரும்பி கொண்டிருந்த பொழுது, இவர்கள் கார் முன்பு சென்று கொண்டிருந்தஇருசக்கர வாகனத்தின் குறுக்கே ஆடு வந்ததால் விபத்த ஏற்பட்டுள்ளது.
இதனால் வாகனத்தில் இருந்த இளைஞர் கீழே விழுந்ததில் பலத்த காயம் அடைந்துள்ளார். இதனை பார்த்ததும் செவிலியர் வனஜா உடனடியாக தனது காரை நிறுத்தி இளைஞரை பரிசோதனை செய்துள்ளார். அப்பொழுது அவருக்கு நாடி துடிப்பு நின்று ஆபத்தான நிலையில் இருந்துள்ளார். சற்றும் யோசிக்காமல் சிபிஆர் என்று சொல்லப்படக்கூடிய இதயத்துடிப்பை மீண்டும் கொண்டுவரும் சிகிச்சையை வனஜா இளைஞருக்கு கொடுத்துள்ளார்.
அதில் அந்த இளைஞரின் இதயத்துடிப்பு மீண்டும் பழைய நிலைக்கு வந்துள்ளது. அதன் பின்பு மன்னார்குடி அரசு மருத்துவமனையில் அவரை சிகிச்சைக்காக அனுமதித்து அவரது உடல்நிலை சரியான பின் அவ்விடத்தில் இருந்து வனஜா கிளம்பியுள்ளார். விபத்தில் சிக்கி ஆபத்தான நிலையில் இருந்த இளைஞரின் உயிரை காப்பாற்றிய செவிலியர் வனஜாவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
மும்பை : அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் இருவருக்கும் இடையே நடந்த…
டெல்லி : பஹல்காம் விவகாரத்தில் இந்திய ராணுவம் பாகிஸ்தானை கூறிவைத்து தாக்குதல் நடத்தியது போருக்கு வழிவகுத்தது. இரண்டு நாடுகளுக்கும் இடையே நடந்த…
மதுரை : தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிக்கொண்டு இருக்கும் சூழலில், தேர்தலில் பங்கேற்கும் அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தலுக்கான வேளைகளில்…
கேன்டர்பரி : இந்திய கிரிக்கெட் வீரர் கருண் நாயர் இளம் கிரிக்கெட் வீரர்கள் கிடைத்த வாய்ப்புகள் எப்படி பயன்படுத்தவேண்டும் என்கிற அளவுக்கு…
சென்னை : பாமக நிறுவனர் ராமதாஸூக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு பெரிய அளவில் பேசுபொருளாக…
சென்னை : தமிழ் திரையுலகின் மூத்த நடிகர் ராஜேஷ், தனது 75-ஆவது வயதில் சென்னையில் மாரடைப்பால் காலமானார். இவருடைய மறைவு சினிமா…